வீறு தானுடை பாடல் வரிகள் (viru tanutai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருநாரையூர் தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருநாரையூர்
சுவாமி : சௌந்தரேசுவரர்

வீறு தானுடை

வீறு தானுடை
வெற்பன் மடந்தையோர்
கூற னாகிலுங்
கூன்பிறை சூடிலும்
நாறு பூம்பொழில்
நாரையூர் நம்பனுக்(கு)
ஆறு சூடலும்
அம்ம அழகிதே. 1

புள்ளி கொண்ட
புலியுரி யாடையும்
வெள்ளி கொண்டவெண்
பூதிமெய் யாடலும்
நள்ளி தெண்டிரை
நாரையூ ரான்நஞ்சை
அள்ளி யுண்டலும்
அம்ம அழகிதே. 2

வேடு தங்கிய
வேடமும் வெண்டலை
ஓடு தங்கிய
வுண்பலி கொள்கையும்
நாடு தங்கிய
நாரையூ ரான்நடம்
ஆடு பைங்கழல்
அம்ம அழகிதே. 3

கொக்கின் றூவலுங்
கூவிளங் கண்ணியும்
மிக்க வெண்டலை
மாலை விரிசடை
நக்க னாகிலும்
நாரையூர் நம்பனுக்(கு)
அக்கி னாரமும்
அம்ம அழகிதே. 4

வடிகொள் வெண்மழு
மானமர் கைகளும்
பொடிகொள் செம்பவ
ளம்புரை மேனியும்
நடிகொள் நன்மயில் சேர்திரு நாரையூர்
அடிகள் தம்வடி வம்ம அழகிதே. 5

சூலம் மல்கிய
கையுஞ் சுடரொடு
பாலும் நெய்தயி
ராடிய பான்மையும்
ஞாலம் மல்கிய
நாரையூர் நம்பனுக்(கு)
ஆல நீழலும்
அம்ம அழகிதே. 6

பண்ணி னான்மறை
பாடலொ டாடலும்
எண்ணி லார்புர
மூன்றெரி செய்ததும்
நண்ணி னார்துயர்
தீர்த்தலும் நாரையூர்
அண்ண லார்செய்கை
அம்ம அழகிதே. 7

என்பு பூண்டெரு
தேறி இளம்பிறை
மின்பு ரிந்த
சடைமேல் விளங்கவே
நன்ப கற்பலி
தேரினும் நாரையூர்
அன்ப னுக்கது
அம்ம அழகிதே. 8

முரலுங் கின்னரம்
மொந்தை முழங்கவே
இரவி னின்றெரி
யாடலு நீடுவான்
நரலும் வாரிநன்
னாரையூர் நம்பனுக்(கு)
அரவும் பூணுதல்
அம்ம அழகிதே. 9

கடுக்கை யஞ்சடை
யன்கயி லைம்மலை
எடுத்த வாளரக்
கன்றலை ஈரைஞ்சும்
நடுக்கம் வந்திற
நாரையூ ரான்விரல்
அடுத்த தன்மையும்
அம்ம அழகிதே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment