கடிதாய்க் கடற்காற்று பாடல் வரிகள் (katitayk katarkarru) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கோடி – கோடிக்கரை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருக்கோடி – கோடிக்கரைகடிதாய்க் கடற்காற்று

கடிதாய்க் கடற்காற்று
வந்தெற்றக் கரைமேற்
குடிதான் அயலேஇருந்
தாற்குற்ற மாமோ
கொடியேன் கண்கள்கண்
டனகோடிக் குழகீர்
அடிகேள் உமக்கார்
துணையாக இருந்தீரே. 1

முன்றான் கடல்நஞ்ச
முண்ட அதனாலோ
பின்றான் பரவைக்
குபகாரஞ் செய்தாயோ
குன்றாப் பொழில்சூழ்
தருகோடிக் குழகா
என்றான் தனியே
இருந்தாய் எம்பிரானே. 2

மத்தம் மலிசூழ்
மறைக்கா டதன்றென்பால்
பத்தர் பலர்பாட
இருந்த பரமா
கொத்தார் பொழில்சூழ்
தருகோடிக் குழகா
எத்தாற் றனியே
இருந்தாய் எம்பிரானே. 3

காடேல் மிகவா
லிதுகா ரிகையஞ்சக்
கூடிப் பொந்தில்
ஆந்தைகள் கூகைகுழற
வேடித்தொண்டர்
சாலவுந் தீயர் சழக்கர்
கோடிக் குழகா
இடங்கோயில் கொண்டாயே. 4

மையார் தடங்கண்ணி
பங்காகங் கையாளும்
மெய்யாகத் திருந்தனள்
வேறிடம் இல்லை
கையார் வளைக்காடு
காளோடும் உடனாய்க்
கொய்யார் பொழிற்கோடி
யேகோயில் கொண்டாயே. 5

அரவேர் அல்குலாளை
ஓர்பாக மமர்ந்து
மரவங் கமழ்மா
மறைக்கா டதன்றென்பாற்
குரவப் பொழில்சூழ்
தருகோடிக் குழகா
இரவே துணையாய்
இருந்தாய் எம்பிரானே. 6

பறையுங் குழலும்
ஒலிபாட லியம்ப
அறையுங் கழலார்க்க
நின்றாடும் அமுதே
குறையாப் பொழில்சூழ்
தருகோடிக் குழகா
இறைவா தனியே
இருந்தாய் எம்பிரானே. 7

ஒற்றியூ ரென்றஊ
னத்தினா லதுதானோ
அற்றப் படஆ
ரூரதென் றகன்றாயோ
முற்றா மதிசூடிய
கோடிக் குழகா
எற்றாற் றனியே
இருந்தாய் எம்பிரானே. 8

நெடியானொடு நான்முக
னும்மறி வொண்ணாப்
படியான் பலிகொள்ளும்
இடங்குடி இல்லை
கொடியார்பலர் வேடர்கள்
வாழுங் கரைமேல்
அடிகேள் அன்பதா
யிடங்கோயில் கொண்டாயே. 9

பாரூர் மலிசூழ்
மறைக்கா டதன்றென்பால்
ஏரார் பொழில்சூழ்
தருகோடிக் குழகை
ஆரூரன் உரைத்தன
பத்திவை வல்லார்
சீரூர் சிவலோகத்
திருப்பவர் தாமே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment