வேத நாயகன் பாடல் வரிகள் (veta nayakan) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் ஆதிபுராணம் தலம் பொதுப் பதிகங்கள் நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : பொதுப் பதிகங்கள்
தலம் : ஆதிபுராணம்வேத நாயகன்

வேத நாயகன்
வேதியர் நாயகன்
மாதின் நாயகன்
மாதவர் நாயகன்
ஆதி நாயகன்
ஆதிரை நாயகன்
பூத நாயகன்
புண்ணிய மூர்த்தியே. 1

செத்துச் செத்துப்
பிறப்பதே தேவென்று
பத்தி செய்மனப்
பாறைகட் கேறுமோ
அத்த னென்றரி
யோடு பிரமனுந்
துத்தி யஞ்செய
நின்றநற் சோதியே. 2

நூறு கோடி
பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி
நாராயண ரங்ஙனே
ஏறு கங்கை
மணலெண்ணில் இந்திரர்
ஈறி லாதவன்
ஈசன் ஒருவனே. 3

வாது செய்து
மயங்கு மனத்தராய்
ஏது சொல்லுவீ
ராகிலும் ஏழைகாள்
யாதோர் தேவ
ரெனப்படு வார்க் கெல்லாம்
மாதே வன்னலாற்
றேவர்மற் றில்லையே. 4

கூவ லாமை
குரைகட லாமையைக்
கூவ லோடொக்கு
மோகட லென்றல்போற்
பாவ காரிகள்
பார்ப்பரி தென்பராற்
தேவ தேவன்
சிவன்பெருந் தன்மையே. 5

பேய்வ னத்தமர்
வானைப்பி ரார்த்தித்தார்க்
கீவ னையிமை
யோர்முடி தன்னடிச்
சாய்வ னைச்சல
வார்கள் தமக்குடற்
சீவ னைச்சிவ
னைச்சிந்தி யார்களே. 6

எரிபெ ருக்குவர்
அவ்வெரி ஈசன
துருவ ருக்கம
தாவ துணர்கிலார்
அரிய யற்கரி
யானை அயர்த்துப்போய்
நரிவி ருத்தம
தாகுவர் நாடரே 7

அருக்கன் பாதம்
வணங்குவர் அந்தியில்
அருக்க னாவான்
அரனுரு வல்லனோ
இருக்கு நான்மறை
ஈசனை யேதொழுங்
கருத்தி னைநினை
யார்கன் மனவரே. 8

தாயி னும்நல்ல
சங்கர னுக்கன்பர்
ஆய வுள்ளத்
தமுதருந் தப்பெறார்
பேயர் பேய்முலை
யுண்டுயிர் போக்கிய
மாயன் மாயத்துப்
பட்ட மனத்தரே. 9

அரக்கன் வல்லரட்
டாங்கொழித் தாரருள்
பெருக்கச் செய்த
பிரான்பெருந் தன்மையை
அருத்தி செய்தறி
யப்பெறு கின்றிலர்
கருத்தி லாக்கய
வக்கணத் தோர்களே.

திருநாவுக்கரசுநாயனார் அருளிச்செய்த தேவாரப்பதிகங்கள் ஐந்தாம் திருமுறை முற்றும். 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment