தன்னைச் சரணென்று பாடல் வரிகள் (tannaic caranenru) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்புகலூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருப்புகலூர்தன்னைச் சரணென்று

தன்னைச் சரணென்று தாளடைந்
தேன்றன் அடியடையப்
புன்னைப் பொழிற்புக லூரண்ணல்
செய்வன கேண்மின்களோ
என்னைப் பிறப்பறுத் தென்வினை
கட்டறுத் தேழ்நரகத்
தென்னைக் கிடக்கலொட் டான்சிவ
லோகத் திருத்திடுமே. 1

பொன்னை வகுத்தன்ன மேனிய
னேபுணர் மென்முலையாள்
தன்னை வகுத்தன்ன பாகத்தனே
தமியேற் கிரங்காய்
புன்னை மலர்த்தலை வண்டுறங்
கும்புக லூரரசே
என்னை வகுத்திலை யேலிடும்
பைக்கிடம் யாதுசொல்லே. 2

இப்பதிகத்தில் 3-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 3

பொன்னள வார்சடைக் கொன்றையி
னாய்புக லூரரசே
மன்னுள தேவர்கள் தேடு
மருந்தே வலஞ்சுழியாய்
என்னள வேயுனக் காட்பட்
டிடைக்கலத் தேகிடப்பார்
உன்னள வேயெனக் கொன்றுமி
ரங்காத உத்தமனே. 4

இப்பதிகத்தில் 5-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 5

இப்பதிகத்தில் 6-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 6

இப்பதிகத்தில் 7-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 7

இப்பதிகத்தில் 8-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 9

ஓணப் பிரானும் ஒளிர்மா
மலர்மிசை உத்தமனுங்
காணப் பராவியுங் காண்கின்
றிலர்கர நாலைந்துடைத்
தோணற் பிரானை வலிதொலைத்
தோன்தொல்லை நீர்ப்புகலூர்க்
கோணப் பிரானைக் குறுகக்
குறுகா கொடுவினையே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment