வானஞ் சேர்மதி பாடல் வரிகள் (vanan cermati) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் அன்பில்ஆலந்துறை – அன்பில் தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு வடகரை
தலம் : அன்பில்ஆலந்துறை – அன்பில்
சுவாமி : சத்திவாகீசர்
அம்பாள் : சௌந்தரநாயகி

வானஞ் சேர்மதி

வானஞ் சேர்மதி
சூடிய மைந்தனை
நீநெஞ் சேகெடு
வாய்நினை கிற்கிலை
ஆனஞ் சாடியை
அன்பிலா லந்துறைக்
கோனெஞ் செல்வனைக்
கூறிட கிற்றியே. 1

கார ணத்தர்
கருத்தர் கபாலியார்
வார ணத்துரி
போர்த்த மணாளனார்
ஆர ணப்பொருள்
அன்பிலா லந்துறை
நார ணற்கரி
யானொரு நம்பியே. 2

அன்பினா னஞ்ச
மைந்துட னாடிய
என்பின் ஆனை
யுரித்துக் களைந்தவன்
அன்பி லானையம்
மானையள் ளூறிய
அன்பி னால்நினைந்
தாரறிந் தார்களே. 3

சங்கை யுள்ளதுஞ்
சாவது மெய்யுமை
பங்க னாரடி
பாவியே னானுய்ய
அங்க ணனெந்தை
அன்பிலா லந்துறைச்
செங்க ணாரடிச்
சேரவும் வல்லனே. 4

கொக்கி றகர்
குளிர்மதிச் சென்னியர்
மிக்க ரக்கர்
புரமெரி செய்தவர்
அக்க ரையினர்
அன்பிலா லந்துறை
நக்கு ருவரும்
நம்மை யறிவரே. 5

வெள்ள முள்ள
விரிசடை நந்தியைக்
கள்ள முள்ள
மனத்தவர் காண்கிலார்
அள்ள லார்வயல்
அன்பிலா லந்துறை
உள்ள வாறறி
யார்சிலர் ஊமரே. 6

பிறவி மாயப்
பிணக்கில் அழுந்தினும்
உறவெ லாஞ்சிந்தித்
துன்னி உகவாதே
அறவன் எம்பிரான்
அன்பிலா லந்துறை
மறவா தேதொழு
தேத்தி வணங்குமே. 7

நுணங்கு நூலயன்
மாலும் இருவரும்
பிணங்கி யெங்குந்
திரிந்தெய்த்துங் காண்கிலா
அணங்கன் எம்பிரான்
அன்பிலா லந்துறை
வணங்கும் நும்வினை
மாய்ந்தறும் வண்ணமே. 8

பொய்யெ லாமுரைக்
குஞ்சமண் சாக்கியக்
கையன் மாருரை
கேளா தெழுமினோ
ஐயன் எம்பிரான்
அன்பிலா லந்துறை
மெய்யன் சேவடி
யேத்துவார் மெய்யரே. 9

இலங்கை வேந்தன்
இருபது தோளிற்று
மலங்க மாமலை
மேல்விரல் வைத்தவன்
அலங்கல் எம்பிரான்
அன்பிலா லந்துறை
வலங்கொள் வாரைவா
னோர்வலங் கொள்வரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment