உள்ளா றாததோர் பாடல் வரிகள் (ulla ratator) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருநள்ளாறு தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருநள்ளாறு
சுவாமி : தர்ப்பாரண்யேஸ்வரர்
அம்பாள் : போகமார்த்தபூண்முலையாள்
உள்ளா றாததோர்
உள்ளா றாததோர்
புண்டரி கத்திரள்
தெள்ளா றாச்சிவ
சோதித் திரளினைக்
கள்ளா றாதபொற்
கொன்றை கமழ்சடை
நள்ளா றாவென
நம்வினை நாசமே. 1
ஆர ணப்பொரு
ளாமரு ளாளனார்
வார ணத்துரி
போர்த்த மணாளனார்
நார ணன்நண்ணி
யேத்துநள் ளாறனார்
கார ணக்கலை
ஞானக் கடவுளே. 2
மேகம் பூண்டதோர்
மேருவிற் கொண்டெயில்
சோகம் பூண்டழல்
சோரத்தொட் டானவன்
பாகம் பூண்டமால்
பங்கயத் தானொடு
நாகம் பூண்டுகூத்
தாடுநள் ளாறனே. 3
மலியுஞ் செஞ்சடை
வாளர வம்மொடு
பொலியும் பூம்புனல்
வைத்த புனிதனார்
நலியுங் கூற்றை
நலிந்தநள் ளாறர்தம்
வலியுங் கண்டிறு
மாந்து மகிழ்வனே. 4
உறவ னாய்நிறைந்
துள்ளங் குளிர்ப்பவன்
இறைவ னாகிநின்
றெண்ணிறைந் தானவன்
நறவ நாறும்
பொழிற்றிரு நள்ளாறன்
மறவ னாய்ப்பன்றிப்
பின்சென்ற மாயமே. 5
செக்க ரங்கழி
செஞ்சுடர்ச் சோதியார்
நக்க ரங்கர
வார்த்தநள் ளாறனார்
வக்க ரன்னுயிர்
வவ்விய மாயற்குச்
சக்க ரமருள்
செய்த சதுரரே. 6
வஞ்ச நஞ்சிற்
பொலிகின்ற கண்டத்தர்
விஞ்சை யிற்செல்வப்
பாவைக்கு வேந்தனார்
வஞ்ச நெஞ்சத்
தவர்க்கு வழிகொடார்
நஞ்ச நெஞ்சர்க்
கருளுநள் ளாறரே. 7
அல்ல னென்று
மலர்க்கரு ளாயின
சொல்ல னென்றுசொல்
லாமறைச் சோதியான்
வல்ல னென்றும்வல்
லார்வளம் மிக்கவர்
நல்ல னென்றும்நல்
லார்க்குநள் ளாறனே. 8
பாம்ப ணைப்பள்ளி
கொண்ட பரமனும்
பூம்ப ணைப்பொலி
கின்ற புராணனுந்
தாம்ப ணிந்தளப்
பொண்ணாத் தனித்தழல்
நாம்ப ணிந்தடி
போற்றுநள் ளாறனே. 9
இலங்கை மன்னன்
இருபது தோளிற
மலங்க மால்வரை
மேல்விரல் வைத்தவர்
நலங்கொள் நீற்றர்நள்
ளாறரை நாடொறும்
வலங்கொள் வார்வினை
யாயின மாயுமே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
திருச்சிற்றம்பலம்