Thiru Vaarthai Thiruvasagam Lyrics in Tamil

திருவார்த்தை திருவாசகம் (Thiru vaarthai Thiruvasagam)

அருளியவர் : மாணிக்கவாசகர்
தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)
நாடு : பாண்டியநாடு

சிறப்பு: அறிவித்து அன்புறுதல்; அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

திருச்சிற்றம்பலம்

மாதிவர் பாகன் மறைபயின்ற வாசகன்
மாமலர் மேயசோதி
கோதில் பரங்கருணையடியார் குலாவு
நீதி குண மாகநல்கும்
போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன்
மண்ணிடை வந்திழிந்து
ஆதிப் பிரமம் வெளிப்படுத்த அருளறி
வார் எம்பிரானாவாரே. 1

மாலயன் வானவர் கோனும்வந்து வணங்க
அவர்க்கருள் செய்தஈசன்
ஞாலம் அதனிடை வந்திழிந்து நன்னெறி
காட்டி நலம்திகழும்
கோல மணியணி மாடநீடு குலாவு
மிடைவை மடநல்லாட்குச்
சீல மிகக்கரு ணையளிக்குந் திறமறி
வார்எம் பிரானாவாரே. 2

அணிமுடி ஆதி அமரர்கோமான் ஆனந்தக்
கூத்தன் அறுசமயம்
பணிவகை செய்து படவதேறிப் பாரொடு
விண்ணும் பரவியேத்தப்
பிணிகெடநல்கும் பெருந்துறையெம் பேரரு
ளாளன்பெண் பாலுகந்து
மணிவலை கொண்டுவான் மீன்விசிறும் வகையறி
வார் எம்பிரானாவாரே. 3

வேடுரு வாகி மகேந்திரத்து மிகுகுறை
வானவர் வந்துதன்னைத்
தேட இருந்த சிவபெருமான் சிந்தனை
செய்தடி யோங்களுய்ய
ஆடல் அமர்ந்த பரிமாஏறி ஐயன்
பெருந்துறை ஆதிஅந்நாள்
ஏடர் களையெங்கும் ஆண்டுகொண்ட இயல்பறி
வார்எம் பிரானாவாரே. 4

வந்திமை யோர்கள் வணங்கியேத்த மாக்கரு
ணைக்கட லாய்அடியார்
பந்தனை விண்டற நல்கும்எங்கள் பரமன்
பெருந்துறை ஆதி அந்நாள்
உந்து திரைக்கட லைக்கடந்தன் றோங்கு
மதிலிலங்கை அதனில்
பந்தணை மெல்லிர லாட்கருளும் பரிசறி
வார்எம் பிரானாவாரே. 5

வேவத் திரிபுரஞ் செற்றவில்லி வேடுவ
னாய்க்கடி நாய்கள்சூழ
ஏவற் செயல்செய்யுந் தேவர்முன்னே எம்பெரு
மான்தான் இயங்கு காட்டில்
ஏவுண்ட பன்றிக் கிரங்கியீசன் எந்தை
பெருந்துறை ஆதியன்று
கேவலங் கேழலாய்ப் பால்கொடுத்த கிடப்பறி
வார்எம் பிரானாவாரே. 6

நாதம் உடையதோர் நற்கமலப் போதினில்
நண்ணிய நன்னுதலார்
ஓதிப் பணிந்தலர் தூவியேத்த ஒளிவளர்
சோதியெம் ஈசன் மன்னும்
போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன்
மண்ணிடை வந்து தோன்றிப்
பேதங் கெடுத்தருள் செய்பெருமை அறியவல்
லார்எம் பிரானாவாரே. 7

பூவலர் கொன்றையம் மாலைமார்பன் போருகிர்
வன்புலி கொன்றவீரன்
மாதுநல் லாளுமை மங்கைபங்கன் வண்பொழில்
சூழ்தென் பெருந்துறைக்கோன்
ஏதில் பெரும்புகழ் எங்கள்ஈசன் இருங்கடல்
வாணற்குத் தீயில்தோன்றும்
ஓவிய மங்கையர் தோள்புணரும் உருவறி
வார்எம் பிரானாவாரே. 8

தூவெள்ளை நீறணி எம்பெருமான் சோதி
மகேந்திர நாதன்வந்து
தேவர் தொழும்பதம் வைத்தஈசன் தென்னன்
பெருந்துறை யாளிஅன்று
காதல் பெருகக் கருணைகாட்டித் தன்கழல்
காட்டிக் கசிந்துருகக்
கேதங் கெடுத்தென்னை ஆண்டருளும் கிடப்பறி
வார்எம் பிரானாவாரே. 9

அங்கணன் எங்கள் அமரர்பெம்மான் அடியார்க்
கமுதன் அவனிவந்த
எங்கள் பிரான்இரும் பாசந்தீர இகபரம்
ஆயதோர் இன்பமெய்தச்
சங்கங் கவர்ந்து வண் சாத்தினோடுஞ் சதுரன்
பெருந்துறை யாளிஅன்று
மங்கையர் மல்கும் மதுரைசேர்ந்த வகையறி
வார்எம் பிரானாவாரே. 10 திருவார்த்தை

 

அருளியவர் : மாணிக்கவாசகர்
தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)
நாடு : பாண்டியநாடு

சிறப்பு: அறிவித்து அன்புறுதல்; அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

திருச்சிற்றம்பலம்

மாதிவர் பாகன் மறைபயின்ற வாசகன்
மாமலர் மேயசோதி
கோதில் பரங்கருணையடியார் குலாவு
நீதி குண மாகநல்கும்
போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன்
மண்ணிடை வந்திழிந்து
ஆதிப் பிரமம் வெளிப்படுத்த அருளறி
வார் எம்பிரானாவாரே. 1

மாலயன் வானவர் கோனும்வந்து வணங்க
அவர்க்கருள் செய்தஈசன்
ஞாலம் அதனிடை வந்திழிந்து நன்னெறி
காட்டி நலம்திகழும்
கோல மணியணி மாடநீடு குலாவு
மிடைவை மடநல்லாட்குச்
சீல மிகக்கரு ணையளிக்குந் திறமறி
வார்எம் பிரானாவாரே. 2

அணிமுடி ஆதி அமரர்கோமான் ஆனந்தக்
கூத்தன் அறுசமயம்
பணிவகை செய்து படவதேறிப் பாரொடு
விண்ணும் பரவியேத்தப்
பிணிகெடநல்கும் பெருந்துறையெம் பேரரு
ளாளன்பெண் பாலுகந்து
மணிவலை கொண்டுவான் மீன்விசிறும் வகையறி
வார் எம்பிரானாவாரே. 3

வேடுரு வாகி மகேந்திரத்து மிகுகுறை
வானவர் வந்துதன்னைத்
தேட இருந்த சிவபெருமான் சிந்தனை
செய்தடி யோங்களுய்ய
ஆடல் அமர்ந்த பரிமாஏறி ஐயன்
பெருந்துறை ஆதிஅந்நாள்
ஏடர் களையெங்கும் ஆண்டுகொண்ட இயல்பறி
வார்எம் பிரானாவாரே. 4

வந்திமை யோர்கள் வணங்கியேத்த மாக்கரு
ணைக்கட லாய்அடியார்
பந்தனை விண்டற நல்கும்எங்கள் பரமன்
பெருந்துறை ஆதி அந்நாள்
உந்து திரைக்கட லைக்கடந்தன் றோங்கு
மதிலிலங்கை அதனில்
பந்தணை மெல்லிர லாட்கருளும் பரிசறி
வார்எம் பிரானாவாரே. 5

வேவத் திரிபுரஞ் செற்றவில்லி வேடுவ
னாய்க்கடி நாய்கள்சூழ
ஏவற் செயல்செய்யுந் தேவர்முன்னே எம்பெரு
மான்தான் இயங்கு காட்டில்
ஏவுண்ட பன்றிக் கிரங்கியீசன் எந்தை
பெருந்துறை ஆதியன்று
கேவலங் கேழலாய்ப் பால்கொடுத்த கிடப்பறி
வார்எம் பிரானாவாரே. 6

நாதம் உடையதோர் நற்கமலப் போதினில்
நண்ணிய நன்னுதலார்
ஓதிப் பணிந்தலர் தூவியேத்த ஒளிவளர்
சோதியெம் ஈசன் மன்னும்
போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன்
மண்ணிடை வந்து தோன்றிப்
பேதங் கெடுத்தருள் செய்பெருமை அறியவல்
லார்எம் பிரானாவாரே. 7

பூவலர் கொன்றையம் மாலைமார்பன் போருகிர்
வன்புலி கொன்றவீரன்
மாதுநல் லாளுமை மங்கைபங்கன் வண்பொழில்
சூழ்தென் பெருந்துறைக்கோன்
ஏதில் பெரும்புகழ் எங்கள்ஈசன் இருங்கடல்
வாணற்குத் தீயில்தோன்றும்
ஓவிய மங்கையர் தோள்புணரும் உருவறி
வார்எம் பிரானாவாரே. 8

தூவெள்ளை நீறணி எம்பெருமான் சோதி
மகேந்திர நாதன்வந்து
தேவர் தொழும்பதம் வைத்தஈசன் தென்னன்
பெருந்துறை யாளிஅன்று
காதல் பெருகக் கருணைகாட்டித் தன்கழல்
காட்டிக் கசிந்துருகக்
கேதங் கெடுத்தென்னை ஆண்டருளும் கிடப்பறி
வார்எம் பிரானாவாரே. 9

அங்கணன் எங்கள் அமரர்பெம்மான் அடியார்க்
கமுதன் அவனிவந்த
எங்கள் பிரான்இரும் பாசந்தீர இகபரம்
ஆயதோர் இன்பமெய்தச்
சங்கங் கவர்ந்து வண் சாத்தினோடுஞ் சதுரன்
பெருந்துறை யாளிஅன்று
மங்கையர் மல்கும் மதுரைசேர்ந்த வகையறி
வார்எம் பிரானாவாரே. 10

Leave a Comment