பெருக லாந்தவம் பாடல் வரிகள் (peruka lantavam) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருமருகல் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருமருகல்
சுவாமி : மாணிக்கவண்ணர்
அம்பாள் : வண்டார்குழலி

பெருக லாந்தவம்

பெருக லாந்தவம்
பேதைமை தீரலாந்
திருக லாகிய
சிந்தை திருத்தலாம்
பருக லாம்பர
மாயதோ ரானந்தம்
மருக லானடி
வாழ்த்தி வணங்கவே. 1

பாடங் கொள்பனு
வற்றிறங் கற்றுப்போய்
நாடங் குள்ளன
தட்டிய நாணிலீர்
மாடஞ் சூழ்மரு
கற்பெரு மான்றிரு
வேடங் கைதொழ
வீடெளி தாகுமே. 2

சினத்தி னால்வருஞ்
செய்தொழி லாமவை
அனைத்தும் நீங்கிநின்
றாதர வாய்மிக
மனத்தி னால்மரு
கற்பெரு மான்றிறம்
நினைப்பி னார்க்கில்லை
நீணில வாழ்க்கையே. 3

ஓது பைங்கிளிக்
கொண்பால் அமுதூட்டிப்
பாது காத்துப்
பலபல கற்பித்து
மாது தான்மரு
கற்பெரு மானுக்குத்
தூது சொல்ல
விடத்தான் தொடங்குமே. 4

இன்ன வாறென்ப
துண்டறி யேனின்று
துன்னு கைவளை
சோரக்கண் நீர்மல்கும்
மன்னு தென்மரு
கற்பெரு மான்றிறம்
உன்னி யொண்கொடி
உள்ள முருகுமே. 5

சங்கு சோரக்
கலையுஞ் சரியவே
மங்கை தான்மரு
கற்பெரு மான்வரும்
அங்க வீதி
அருகணை யாநிற்கும்
நங்கை மீரிதற்
கென்செய்கேன் நாளுமே. 6

காட்சி பெற்றில
ளாகிலுங் காதலே
மீட்சி யொன்றறி
யாது மிகுவதே
மாட்சி யார்மரு
கற்பெரு மானுக்குத்
தாழ்ச்சி சாலவுண்
டாகுமென் தையலே. 7

நீடு நெஞ்சுள்
நினைந்துகண் ணீர்மல்கும்
ஓடு மாலினோ
டொண்கொடி மாதராள்
மாட நீண்மரு
கற்பெரு மான்வரிற்
கூடு நீயென்று
கூட லிழைக்குமே. 8

கந்த வார்குழல்
கட்டிலள் காரிகை
அந்தி மால்விடை
யோடுமன் பாய்மிக
வந்தி டாய்மரு
கற்பெரு மானென்று
சிந்தை செய்து
திகைத்திடுங் காண்மினே. 9

ஆதி மாமலை
அன்றெடுத் தானிற்றுச்
சோதி யென்றலுந்
தொல்லருள் செய்திடும்
ஆதி யான்மரு
கற்பெரு மான்றிறம்
ஓதி வாழ்பவர்
உம்பர்க்கும் உம்பரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment