Kasanaikana Thevaram song lyrics in tamil

காச னைக்கன பாடல் வரிகள் (kasanaikkana thevaram) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் மறக்கிற்பனே என்னும் தலம் பொதுப் பதிகங்கள் நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : பொதுப் பதிகங்கள்
தலம் : மறக்கிற்பனே என்னும்காச னைக்கன

காச னைக்கன
லைக்கதிர் மாமணித்
தேச னைப்புக
ழார்சிலர் தெண்ணர்கள்
மாசி னைக்கழித்
தாட்கொள வல்லவெம்
ஈச னையினி
நான்மறக் கிற்பனே. 1

புந்திக் குவிளக்
காய புராணனைச்
சந்திக் கண்நட
மாடுஞ் சதுரனை
அந்தி வண்ணனை
ஆரழல் மூர்த்தியை
வந்தெ னுள்ளங்கொண்
டானை மறப்பனே. 2

ஈசன் ஈசனென்
றென்றும் அரற்றுவன்
ஈசன் றானென்
மனத்திற் பிரிவிலன்
ஈசன் றன்னையு
மென்மனத் துக்கொண்டு
ஈசன் றன்னையும்
யான்மறக் கிற்பனே. 3

ஈசன் என்னை
யறிந்த தறிந்தனன்
ஈசன் சேவடி
யேற்றப் பெறுதலால்
ஈசன் சேவடி
யேத்தப் பெற்றேனினி
ஈசன் றன்னையும்
யான்மறக் கிற்பனே. 4

தேனைப் பாலினைத்
திங்களை ஞாயிற்றை
வான வெண்மதி
சூடிய மைந்தனை
வேனி லானை
மெலிவுசெய் தீயழல்
ஞான மூர்த்தியை
நான்மறக் கிற்பனே. 5

கன்ன லைக்கரும்
பூறிய தேறலை
மின்ன னைமின்
னனைய வுருவனைப்
பொன்ன னைமணிக்
குன்று பிறங்கிய
என்ன னையினி
யான்மறக் கிற்பனே. 6

கரும்பி னைக்கட்டி
யைக்கந்த மாமலர்ச்
சுரும்பி னைச்சுடர்ச்
சோதியுட் சோதியை
அரும்பி னிற்பெரும்
போதுகொண் டாய்மலர்
விரும்பும் ஈசனை
நான்மறக் கிற்பனே. 7

துஞ்சும் போதுஞ்
சுடர்விடு சோதியை
நெஞ்சுள் நின்று
நினைப்பிக்கு நீதியை
நஞ்சு கண்டத்
தடக்கிய நம்பனை
வஞ்ச னேனினி
யான்மறக் கிற்பனே. 8

புதிய பூவினைப்
புண்ணிய நாதனை
நிதியை நீதியை
நித்திலக் குன்றினைக்
கதியைக் கண்டங்
கறுத்த கடவுளை
மதியை மைந்தனை
நான்மறக் கிற்பனே. 9

கருகு கார்முகில்
போல்வதொர் கண்டனை
உருவ நோக்கியை
ஊழி முதல்வனைப்
பருகு பாலனைப்
பான்மதி சூடியை
மருவு மைந்தனை
நான்மறக் கிற்பனே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment