பறையின் ஓசையும் பாடல் வரிகள் (paraiyin ocaiyum) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவிடைமருதூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவிடைமருதூர்
சுவாமி : மகாலிங்கேசுவரர்
அம்பாள் : பெருநலமுலையம்மை

பறையின் ஓசையும்

பறையின் ஓசையும்
பாடலின் ஓசையும்
மறையின் ஓசையும்
வைகும் அயலெலாம்
இறைவன் எங்கள்
பிரானிடை மருதினில்
உறையும் ஈசனை
உள்குமென் உள்ளமே. 1

மனத்துள் மாயனை
மாசறு சோதியைப்
புனிற்றுப் பிள்ளைவெள்
ளைம்மதி சூடியை
எனக்குத் தாயையெம்
மானிடை மருதனை
நினைத்திட் டூறி
நிறைந்ததென் னுள்ளமே. 2

வண்ட ணைந்தன
வன்னியும் மத்தமுங்
கொண்ட ணிந்த
சடைமுடிக் கூத்தனை
எண்டி சைக்கும்
இடைமரு தாவென
விண்டு போயறும்
மேலை வினைகளே. 3

துணையி லாமையிற்
றூங்கிருட் பேய்களோ
டணைய லாவதெ
மக்கரி தேயெனா
இணையி லாஇடை
மாமரு தில்லெழு
பணையி லாகமஞ்
சொல்லுந்தன் பாங்கிக்கே. 4

மண்ணை யுண்டமால்
காணான் மலரடி
விண்ணை விண்டயன்
காணான் வியன்முடி
மொண்ணை மாமரு
தாவென்றென் மொய்குழல்
பண்ணை யாயமுந்
தானும் பயிலுமே. 5

மங்கை காணக்
கொடார்மண மாலையைக்
கங்கை காணக்
கொடார்முடிக் கண்ணியை
நங்கை மீர்இடை
மருதரிந் நங்கைக்கே
எங்கு வாங்கிக்
கொடுத்தார் இதழியே.

இப்பதிகத்தில் 7,8,9,10,11-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 6

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 7

இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 9

இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 10

இப்பதிகத்தில் 11-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment