ஓத மார்கட லின்விட பாடல் வரிகள் (ota markata linvita) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவலஞ்சுழி தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவலஞ்சுழி
சுவாமி : கற்பகநாதேஸ்வரர்
அம்பாள் : பெரியநாயகி

ஓத மார்கட லின்விட

ஓத மார்கட
லின்விட முண்டவன்
பூத நாயகன்
பொற்கயி லைக்கிறை
மாதொர் பாகன்
வலஞ்சுழி யீசனைப்
பாத மேத்தப்
பறையுநம் பாவமே. 1

கயிலை நாதன்
கறுத்தவர் முப்புரம்
எயில்கள் தீயெழ
வெல்வல வித்தகன்
மயில்க ளாலும்
வலஞ்சுழி யீசனைப்
பயில்கி லார்சிலர்
பாவித் தொழும்பரே. 2

இளைய காலமெம்
மானை யடைகிலாத்
துளையி லாச்செவித்
தொண்டர்காள் நும்முடல்
வளையுங் காலம்
வலஞ்சுழி யீசனைக்
களைக ணாகக்
கருதிநீர் உய்ம்மினே. 3

நறைகொள் பூம்புனல்
கொண்டெழு மாணிக்காய்க்
குறைவி லாக்கொடுங்
கூற்றுதைத் திட்டவன்
மறைகொள் நாவன்
வலஞ்சுழி மேவிய
இறைவ னையினி
என்றுகொல் காண்பதே. 4

விண்ட வர்புர
மூன்று மெரிகொளத்
திண்டி றற்சிலை
யாலெரி செய்தவன்
வண்டு பண்முர
லுந்தண் வலஞ்சுழி
அண்ட னுக்கடி
மைத்திறத் தாவனே. 5

படங்கொள் பாம்பொடு
பான்மதி யஞ்சடை
அடங்க வாழவல்
லானும்பர் தம்பிரான்
மடந்தை பாகன்
வலஞ்சுழி யானடி
அடைந்த வர்க்கடி
மைத்திறத் தாவனே. 6

நாக்கொண் டுபர
வும்மடி யார்வினை
போக்க வல்ல
புரிசடைப் புண்ணியன்
மாக்கொள் சோலை
வலஞ்சுழி ஈசன்றன்
ஏக்கொ ளப்புர
மூன்றெரி யானவே. 7

தேடு வார்பிர
மன்திரு மாலவர்
ஆடு பாத
மவரும் அறிகிலார்
மாட வீதி
வலஞ்சுழி யீசனைத்
தேடு வானுறு
கின்றதென் சிந்தையே. 8

கண்ப னிக்குங்
கைகூப்புங் கண்மூன்றுடை
நண்ப னுக்கெனை
நான்கொடுப் பேனெனும்
வண்பொ னித்தென்
வலஞ்சுழி மேவிய
பண்ப னிப்பொனைச்
செய்த பரிசிதே. 9

இலங்கை வேந்தன்
இருபது தோளிற
நலங்கொள் பாதத்
தொருவிர லூன்றினான்
மலங்கு பாய்வயல்
சூழ்ந்த வலஞ்சுழி
வலங்கொள் வாரடி
யென்றலை மேலவே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment