முன்பெலாம் இளைய பாடல் வரிகள் (munpelam ilaiya) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவதிகைவீரட்டானம் தலம் நடுநாடு நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : நடுநாடு
தலம் : திருவதிகைவீரட்டானம்
சுவாமி : வீரட்டானேஸ்வரர்
அம்பாள் : திரிபுரசுந்தரி

முன்பெலாம் இளைய

முன்பெலாம் இளைய காலம்
மூர்த்தியை நினையா தோடிக்
கண்கண இருமி நாளுங்
கருத்தழிந் தருத்த மின்றிப்
பின்பக லுணங்கல் அட்டும்
பேதைமார் போன்றேன் உள்ளம்
அன்பனாய் வாழ மாட்டேன்
அதிகைவீ ரட்ட னீரே. 1

கறைப்பெருங் கண்டத் தானே
காய்கதிர் நமனை யஞ்சி
நிறைப்பெருங் கடலுங் கண்டேன்
நீள்வரை யுச்சி கண்டேன்
பிறைப்பெருஞ் சென்னி யானே
பிஞ்ஞகா இவைய னைத்தும்
அறுப்பதோர் உபாயங் காணேன்
அதிகைவீ ரட்ட னீரே. 2

நாதனா ரென்ன நாளும்
நடுங்கின ராகித் தங்கள்
ஏதங்கள் அறிய மாட்டார்
இணையடி தொழுதோம் என்பார்
ஆதனா னவனென் றெள்கி
அதிகைவீ ரட்ட னேநின்
பாதநான் பரவா துய்க்கும்
பழவினைப் பரிசி லேனே. 3

சுடலைசேர் சுண்ண மெய்யர்
சுரும்புண விரிந்த கொன்றைப்
படலைசேர் அலங்கல் மார்பர்
பழனஞ்சேர் கழனித் தெங்கின்
மடலைநீர் கிழிய வோடி
அதனிடை மணிகள் சிந்துங்
கெடிலவீ ரட்ட மேய
கிளர்சடை முடிய னாரே. 4

மந்திர முள்ள தாக
மறிகட லெழுநெய் யாக
இந்திரன் வேள்வித் தீயில்
எழுந்ததோர் கொழுந்தின் வண்ணஞ்
சிந்திர மாக நோக்கித்
தெருட்டுவார் தெருட்ட வந்து
கந்திரம் முரலுஞ் சோலைக்
கானலங் கெடிலத் தாரே. 5

இப்பதிகத்தில் 6-ம் செய்யுட்கள்
சிதைந்து போயின. 6

இப்பதிகத்தில் 7-ம் செய்யுட்கள்
சிதைந்து போயின. 7

இப்பதிகத்தில் 8-ம் செய்யுட்கள்
சிதைந்து போயின. 8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுட்கள்
சிதைந்து போயின. 9

மைஞ்ஞல மனைய கண்ணாள்
பங்கன்மா மலையை யோடி
மெய்ஞ்ஞரம் புதிரம் பில்க
விசைதணிந் தரக்கன் வீழ்ந்து
கைஞ்ஞரம் பெழுவிக் கொண்டு
காதலால் இனிது சொன்ன
கின்னரங் கேட்டு கந்தார்
கெடிலவீ ரட்ட னாரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment