மட்டிட் டகுழ லார்சுழ பாடல் வரிகள் (mattit takula larcula) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் கருவிலி – திருகருவிலிக்கொட்டிடை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : கருவிலி – திருகருவிலிக்கொட்டிடை
சுவாமி : சற்குணேஸ்வரர்
அம்பாள் : சர்வாங்கநாயகி

மட்டிட் டகுழ லார்சுழ

மட்டிட் டகுழ
லார்சுழ லில்வலைப்
பட்டிட் டுமயங்
கிப்பரி யாதுநீர்
கட்டிட் டவினை
போகக் கருவிலிக்
கொட்டிட் டையுறை
வான்கழல் கூடுமே. 1

ஞால(ம்)மல்கு
மனிதர்காள் நாடொறும்
ஏல மாமல
ரோடிலை கொண்டுநீர்
கால னார்வரு
தன்முன் கருவிலிக்
கோல வார்பொழிற்
கொட்டிட்டை சேர்மினே. 2

பங்க மாயின
பேசப் பறைந்துநீர்
மங்கு மாநினை
யாதே மலர்கொடு
கங்கை சேர்சடை
யான்றன் கருவிலிக்
கொங்கு வார்பொழிற்
கொட்டிட்டை சேர்மினே. 3

வாடி நீர்வருந்
தாதே மனிதர்காள்
வேட னாய்விச
யற்கருள் செய்தவெண்
காட னாருறை
கின்ற கருவிலிக்
கோடு நீள்பொழிற்
கொட்டிட்டை சேர்மினே. 4

உய்யு மாறிது
கேண்மின் உலகத்தீர்
பைகொள் பாம்பரை
யான்படை யார்மழுக்
கையி னானுறை
கின்ற கருவிலிக்
கொய்கொள் பூம்பொழிற்
கொட்டிட்டை சேர்மினே. 5

ஆற்ற வும்மவ
லத்தழுந் தாதுநீர்
தோற்றுந் தீயொடு
நீர்நிலந் தூவெளி
காற்று மாகிநின்
றான்றன் கருவிலிக்
கூற்றங் காய்ந்தவன்
கொட்டிட்டை சேர்மினே. 6

நில்லா வாழ்வு
நிலைபெறு மென்றெண்ணிப்
பொல்லா வாறு
செயப்புரி யாதுநீர்
கல்லா ரும்மதில்
சூழ்தண் கருவிலிக்
கொல்லே றூர்பவன்
கொட்டிட்டை சேர்மினே. 7

பிணித்த நோய்ப்பிற
விப்பிறி வெய்துமா
றுணர்த்த லாமிது
கேண்மின் உருத்திர
கணத்தி னார்தொழு
தேத்துங் கருவிலிக்
குணத்தி னானுறை
கொட்டிட்டை சேர்மினே. 8

நம்பு வீரிது
கேண்மின்கள் நாடொறும்
எம்பி ரானென்
றிமையவ ரேத்துமே
கம்ப னாருறை
கின்ற கருவிலிக்
கொம்ப னார்பயில்
கொட்டிட்டை சேர்மினே. 9

பாரு ளீரிது
கேண்மின் பருவரை
பேரு மாறெடுத்
தானை யடர்த்தவன்
கார்கொள் நீர்வயல்
சூழ்தண் கருவிலிக்
கூர்கொள் வேலினன்
கொட்டிட்டை சேர்மினே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment