கருவார் கச்சித் பாடல் வரிகள் (karuvar kaccit) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவேகம்பம் – காஞ்சிபுரம் தலம் தொண்டைநாடு நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : தொண்டைநாடு
தலம் : திருவேகம்பம் – காஞ்சிபுரம்
சுவாமி : தழுவக்குழைந்த நாதர்
அம்பாள் : ஏலவார்குழலி

கருவார் கச்சித்

கருவார் கச்சித், திருவே கம்பத்
தொருவா வென்ன, மருவா வினையே. 1

மதியார் கச்சி, நதியே கம்பம்
விதியா லேத்தப், பதியா வாரே. 2

கலியார் கச்சி, மலியே கம்பம்
பலியாற் போற்ற, நலியா வினையே. 3

வரமார் கச்சிப், புரமே கம்பம்
பரவா ஏத்த, விரவா வினையே. 4

படமார் கச்சி, இடமே கம்பத்
துடையா யென்ன, அடையா வினையே. 5

நலமார் கச்சி, நிலவே கம்பம்
குலவா வேத்தக், கலவா வினையே. 6

கரியின் னுரியன், திருவே கம்பன்
பெரிய புரமூன், றெரிசெய் தானே. 7

இலங்கை யரசைத், துலங்க வூன்றும்
நலங்கொள் கம்பன், இலங்கு சரணே. 8

மறையோன் அரியும், அறியா வனலன்
நெறியே கம்பம், குறியால் தொழுமே. 9

பறியாத் தேரர், நெறியில் கச்சிச்
செறிகொள் கம்பம், குறுகு வோமே. 10

கொச்சை வேந்தன், கச்சிக் கம்பம்
மெச்சுஞ் சொல்லை, நச்சும் புகழே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment