தூவாயா தொண்டுசெய் பாடல் வரிகள் (tuvaya tontucey) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவாரூர்ப்பரவையுன்மண்டலி – திருவாரூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவாரூர்ப்பரவையுன்மண்டலி – திருவாரூர்தூவாயா தொண்டுசெய்

தூவாயா தொண்டுசெய்
வார்படு துக்கங்கள்
காவாயா கண்டுகொண்
டார்ஐவர் காக்கிலும்
நாவாயால் உன்னையே
நல்லன சொல்லுவேற்
காவாவென் பரவையுண்
மண்டளி யம்மானே. 1

பொன்னானே புலவர்க்கு
நின்புகழ் போற்றலாம்
தன்னானே தன்னைப்
புகழ்ந்திடுந் தற்சோதி
மின்னானே செக்கர்
வானத் திளஞாயி
றன்னானே பரவையுண்
மண்டளி யம்மானே. 2

நாமாறா துன்னையே
நல்லன சொல்லுவார்
போமாறென் புண்ணியா
புண்ணியம் ஆனானே
பேய்மாறாப் பிணமிடு
காடுகந் தாடுவாய்க்
காமாறென் பரவையுண்
மண்டளி யம்மானே. 3

நோக்குவேன் உன்னையே
நல்லன நோக்காமைக்
காக்கின்றாய் கண்டுகொண்
டார்ஐவர் காக்கிலும்
வாக்கென்னும் மாலைகொண்
டுன்னை என்மனத்
தார்க்கின்றேன் பரவையுண்
மண்டளி யம்மானே. 4

பஞ்சேரும் மெல்லடி
யாளையோர் பாகமாய்
நஞ்சேரும் நன்மணி
கண்டம் உடையானே
நெஞ்சேர நின்னையே
உள்கி நினைவாரை
அஞ்சேலென் பரவையுண்
மண்டளி யம்மானே. 5

அம்மானே ஆகம
சீலர்க் கருள்நல்கும்
பெம்மானே பேரரு
ளாளன் பிடவூரன்
தம்மானே தண்டமிழ்
நூற்புல வாணர்க்கோர்
அம்மானே பரவையுண்
மண்டளி யம்மானே. 6

விண்டானே மேலையார்
மேலையார் மேலாய
எண்டானே எழுத்தொடு
சொற்பொருள் எல்லாமுன்
கண்டானே கண்டனைக்
கொண்டிட்டுக் காட்டாயே
அண்டானே பரவையுண்
மண்டளி யம்மானே. 7

காற்றானே கார்முகில்
போல்வதோர் கண்டத்தெங்
கூற்றானே கோல்வளை
யாளையோர் பாகமாய்
நீற்றானே நீள்சடை
மேல்நிறை வுள்ளதோர்
ஆற்றானே பரவையுண்
மண்டளி யம்மானே. 8

செடியேன்நான் செய்வினை
நல்லன செய்யாத
கடியேன்நான் கண்டதே
கண்டதே காமுறுங்
கொடியேன்நான் கூறுமா
றுன்பணி கூறாத
அடியேன்நான் பரவையுண்
மண்டளி யம்மானே. 9

கரந்தையும் வன்னியும்
மத்தமுங் கூவிளம்
பரந்தசீர்ப் பரவையுண்
மண்டளி யம்மானை
நிரம்பிய ஊரன்
உரைத்தன பத்திவை
விரும்புவார் மேலையார்
மேலையார் மேலாரே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment