வைத்த மாடும் பாடல் வரிகள் (vaitta matum) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருநீலக்குடி தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருநீலக்குடி
சுவாமி : நீலகண்டேஸ்வரர்
அம்பாள் : அழகம்மை

வைத்த மாடும்

வைத்த மாடும்
மனைவியும் மக்கள்நீர்
செத்த போது
செறியார் பிரிவதே
நித்த நீலக்
குடியர னைந்நினை
சித்த மாகிற்
சிவகதி சேர்திரே. 1

செய்ய மேனியன்
றேனொடு பால்தயிர்
நெய்ய தாடிய
நீலக் குடியரன்
மைய லாய்மற
வாமனத் தார்க்கெலாங்
கையி லாமல
கக்கனி யொக்குமே. 2

ஆற்ற நீள்சடை
ஆயிழை யாளொரு
கூற்றன் மேனியிற்
கோலம தாகிய
நீற்றன் நீலக்
குடியுடை யானடி
போற்றி னாரிடர்
போக்கும் புனிதனே. 3

நாலு வேதியர்க்
கின்னருள் நன்னிழல்
ஆலன் ஆலநஞ்
சுண்டகண் டத்தமர்
நீலன் நீலக்
குடியுறை நின்மலன்
கால னாருயிர்
போக்கிய காலனே. 4

நேச நீலக்
குடியர னேயெனா
நீச ராய்நெடு
மால்செய்த மாயத்தால்
ஈச னோர்சர
மெய்ய எரிந்துபோய்
நாச மானார்
திரிபுர நாதரே. 5

கொன்றை சூடியைக்
குன்ற மகளொடும்
நின்ற நீலக்
குடியர னேயெனீர்
என்றும் வாழ்வுகந்
தேயிறு மாக்குநீர்
பொன்றும் போது
நுமக்கறி வொண்ணுமே. 6

கல்லி னோடெனைப்
பூட்டி அமண்கையர்
ஒல்லை நீர்புக
நூக்கவென் வாக்கினால்
நெல்லு நீள்வயல்
நீலக் குடியரன்
நல்ல நாமம்
நவிற்றியுய்ந் தேனன்றே. 7

அழகி யோமிளை
யோமெனு மாசையால்
ஒழுகி ஆவி
உடல்விடு முன்னமே
நிழல தார்பொழில்
நீலக் குடியரன்
கழல்கொள் சேவடி
கைதொழு துய்ம்மினே. 8

கற்றைச் செஞ்சடைக்
காய்கதிர் வெண்டிங்கள்
பற்றிப் பாம்புடன்
வைத்த பராபரன்
நெற்றிக் கண்ணுடை
நீலக் குடியரன்
சுற்றித் தேவர்
தொழுங்கழற் சோதியே. 9

தருக்கி வெற்பது
தாங்கிய வீங்குதோள்
அரக்க னாருட
லாங்கொர் விரலினால்
நெரித்து நீலக்
குடியரன் பின்னையும்
இரக்க மாயருள்
செய்தனன் என்பரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment