Saravanna Poigayil Neeraadi இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சரவணப் பொய்கையில் நீராடி காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

சரவணப் பொய்கையில் நீராடி- துணை தந்தருள் என்றேன் முருகனிடம் முருகன் பாடல் வரிகள். Saravanna Poigayil Neeraadi -Thunnai Thantharul Endren Muruganidam Murugan Songs – Lord Murugan Devotional songs Tamil Lyrics

============

சரவணப் பொய்கையில் நீராடி- துணை

தந்தருள் என்றேன் முருகனிடம்

இரு கரம் நீட்டி வரம் கேட்டேன் – அந்த

மன்னவன் இன்னருள் மலர் தந்தான் (சரவணப் பொய்கையில்)

அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை- அந்த

அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை

இவ்விடம் இவர் தந்த இன்ப நிலை- கண்டு

என்னிடம் நான் கண்டேன் மாறுதலை (சரவணப் பொய்கையில்)

நல்லவர் என்றும் நல்லவரே -உள்ளம்

உள்ளவர் யாவரும் உள்ளவரே

நல்ல இடம் நான் தேடி வந்தேன் – அந்த

நாயகன் என்னுடன் கூட வந்தான் (சரவணப் பொய்கையில்)

இந்த | saravanna poigayil neeraadi பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs சரவணப் பொய்கையில் நீராடி போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment