யாமாமாநீ யாமாமா பாடல் வரிகள் (yamamani yamama) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு வடகரை
தலம் : சீர்காழி
சுவாமி : பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : திருநிலைநாயகி

யாமாமாநீ யாமாமா

யாமாமாநீ யாமாமா
யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா
மாமாயாநீ மாமாயா 1

யாகாயாழீ காயாகா
தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா
காயாகாழீ யாகாயா. 2

தாவாமூவா தாசாகா
ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ
காசாதாவா மூவாதா. 3

நீவாவாயா காயாழீ
காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா
ழீயாகாயா வாவாநீ. 4

யாகாலாமே யாகாழீ
யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா
ழீகாயாமே லாகாயா. 5

மேலேபோகா மேதேழீ
காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா
ழீதேமேகா போலேமே. 6

நீயாமாநீ யேயாமா
தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா
மாயாயேநீ மாயாநீ. 7

நேணவராவிழ யாசைழியே
வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே
யேழிசையாழவி ராவணனே. 8

காலேமேலே காணீகா
ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ
காணீகாலே மேலேகா. 9

வேரியுமேணவ காழியொயே
யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே
யேயொழிகாவண மேயுரிவே. 10

நேரகழாமித யாசழிதா
யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே
தாழிசயாதமி ழாகரனே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment