வாழ்வாவது மாயம்மிது பாடல் வரிகள் (valvavatu mayam mitu) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கேதாரம் – கேதார்நாத் தலம் வடநாடு நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : வடநாடு
தலம் : திருக்கேதாரம் – கேதார்நாத்வாழ்வாவது மாயம்மிது

வாழ்வாவது மாயம்மிது
மண்ணாவது திண்ணம்
பாழ்போவது பிறவிக்கடல்
பசிநோய்செய்த பறிதான்
தாழாதறஞ் செய்ம்மின்தடங்
கண்ணான்மல ரோனுங்
கீழ்மேலுற நின்றான்றிருக்
கேதாரமெ னீரே. 1

பறியேசுமந் துழல்வீர்பறி
நரிகீறுவ தறியீர்
குறிகூவிய கூற்றங்கொளும்
நாளாலறம் உளவே
அறிவானிலும் அறிவானல
நறுநீரொடு சோறு
கிறிபேசிநின் றிடுவார்தொழு
கேதாரமெ னீரே. 2

கொம்பைப்பிடித் தொருக்காலர்கள்
இருக்கால்மலர் தூவி
நம்பன்னமை ஆள்வானென்று
நடுநாளையும் பகலுங்
கம்பக்களிற் றினமாய்நின்று
சுனைநீர்களைத் தூவிச்
செம்பொற்பொடி சிந்துந்திருக்
கேதாரமெ னீரே. 3

உழக்கேயுண்டு படைத்தீட்டிவைத்
திழப்பார்களுஞ் சிலர்கள்
வழக்கேயெனிற் பிழைக்கேமென்பர்
மதிமாந்திய மாந்தர்
சழக்கேபறி நிறைப்பாரொடு
தவமாவது செயன்மின்
கிழக்கேசல மிடுவார்தொழு
கேதாரமெ னீரே. 4

வாளோடிய தடங்கண்ணியர்
வலையிலழுந் தாதே
நாளோடிய நமனார்தமர்
நணுகாமுனம் நணுகி
ஆளாயுய்ம்மின் அடிகட்கிடம்
அதுவேயெனில் இதுவே
கீளோடர வசைத்தானிடங்
கேதாரமெ னீரே. 5

தளிசாலைகள் தவமாவது
தம்மைப்பெறி லன்றே
குளியீருளங் குருக்கேத்திரங்
கோதாவிரி குமரி
தெளியீருளஞ் சீபர்ப்பதந்
தெற்குவடக் காகக்
கிளிவாழையொண் கனிகீறியுண்
கேதாரமெ னீரே. 6

பண்ணின்றமிழ் இசைபாடலின்
பழவேய்முழ வதிரக்
கண்ணின்னொளி கனகச்சுனை
வயிரம்மவை சொரிய
மண்ணின்றன மதவேழங்கள்
மணிவாரிக்கொண் டெறியக்
கிண்ணென்றிசை முரலுந்திருக்
கேதாரமெ னீரே. 7

முளைக்கைப்பிடி முகமன்சொலி
முதுவேய்களை இறுத்துத்
துளைக்கைக்களிற் றினமாய்நின்று
சுனைநீர்களைத் தூவி
வளைக்கைப்பொழி மழைகூர்தர
மயில்மான்பிணை நிலத்தைக்
கிளைக்கமணி சிந்துந்திருக்
கேதாரமெ னீரே. 8

பொதியேசுமந் துழல்வீர்பொதி
அவமாவதும் அறியீர்
மதிமாந்திய வழியேசென்று
குழிவீழ்வதும் வினையாற்
கதிசூழ்கடல் இலங்கைக்கிறை
மலங்கவரை அடர்த்துக்
கெதிபேறுசெய் திருந்தானிடங்
கேதாரமெ னீரே. 9

நாவின்மிசை அரையன்னொடு
தமிழ்ஞானசம் பந்தன்
யாவர்சிவன் அடியார்களுக்
கடியானடித் தொண்டன்
தேவன்றிருக் கேதாரத்தை
ஊரன்னுரை செய்த
பாவின்தமிழ் வல்லார்பர
லோகத்திருப் பாரே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment