பட்டி ஏறுகந் தேறிப் பாடல் வரிகள் (patti erukan terip) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவண்ணாமலை தலம் நடுநாடு நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : நடுநாடு
தலம் : திருவண்ணாமலை
சுவாமி : அண்ணாமலை நாதர்

பட்டி ஏறுகந் தேறிப்

பட்டி ஏறுகந்
தேறிப் பலஇலம்
இட்ட மாக
இரந்துண் டுழிதரும்
அட்ட மூர்த்திஅண்
ணாமலை கைதொழக்
கெட்டுப் போம்வினை
கேடில்லை காண்மினே. 1

பெற்ற மேறுவர்
பெய்பலிக் கென்றவர்
சுற்ற மாமிகு
தொல்புக ழாளொடும்
அற்றந் தீர்க்கும்அண்
ணாமலை கைதொழ
நற்ற வத்தொடு
ஞானத் திருப்பரே. 2

பல்லி லோடுகை
யேந்திப் பலஇலம்
ஒல்லை சென்றுணங்
கல்கவர் வாரவர்
அல்லல் தீர்க்கும்அண்
ணாமலை கைதொழ
நல்ல வாயின
நம்மை அடையுமே. 3

பாடிச் சென்று
பலிக்கென்று நின்றவர்
ஓடிப் போயினர்
செய்வதொன் றென்கொலோ
ஆடிப் பாடிஅண்
ணாமலை கைதொழ
ஓடிப் போகும்நம்
மேலை வினைகளே. 4

தேடிச் சென்று
திருந்தடி யேத்துமின்
நாடி வந்தவர்
நம்மையும் ஆட்கொள்வர்
ஆடிப் பாடிஅண்
ணாமலை கைதொழ
ஓடிப் போம்நம
துள்ள வினைகளே. 5

கட்டி யொக்குங்
கரும்பி னிடைத்துணி
வெட்டி வீணைகள்
பாடும் விகிர்தனார்
அட்ட மூர்த்திஅண்
ணாமலை மேவிய
நட்ட மாடியை
நண்ணநன் காகுமே. 6

கோணிக் கொண்டையர்
வேடமுன் கொண்டவர்
பாணி நட்டங்க
ளாடும் பரமனார்
ஆணிப் பொன்னினண்
ணாமலை கைதொழப்
பேணி நின்ற
பெருவினை போகுமே. 7

கண்டந் தான்கறுத்
தான்காலன் ஆருயிர்
பண்டு கால்கொடு
பாய்ந்த பரமனார்
அண்டத் தோங்கும்அண்
ணாமலை கைதொழ
விண்டு போகுநம்
மேலை வினைகளே. 8

முந்திச் சென்றுமுப்
போதும் வணங்குமின்
அந்தி வாயொளி
யான்றன்அண் ணாமலை
சிந்தி யாஎழு
வார்வினை தீர்த்திடுங்
கந்த மாமலர்
சூடுங் கருத்தனே. 9

மறையி னானொடு
மாலவன் காண்கிலா
நிறையும் நீர்மையுள்
நின்றருள் செய்தவன்
உறையும் மாண்பின்அண்
ணாமலை கைதொழப்
பறையும் நாஞ்செய்த
பாவங்க ளானவே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment