பாடக மெல்லடிப் பாடல் வரிகள் (pataka mellatip) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருநள்ளாறு தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருநள்ளாறு
சுவாமி : தர்ப்பாரண்யேஸ்வரர்
அம்பாள் : போகமார்த்த பூண்முலையாள்

பாடக மெல்லடிப்

பாடக மெல்லடிப் பாவையோடும்
படுபிணக் காடிடம் பற்றிநின்று
நாடகம் ஆடும்நள் ளாறுடைய
நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்
சூடக முன்கை மடந்தைமார்கள்
துணைவ ரொடுந்தொழு தேத்திவாழ்த்த
ஆடக மாடம் நெருங்குகூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 1

திங்களம் போதுஞ் செழும்புனலுஞ்
செஞ்சடை மாட்டயல் வைத்துகந்து
நங்கண் மகிழுநள் ளாறுடைய
நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்
பொங்கிள மென்முலை யார்களோடும்
புனமயி லாட நிலாமுளைக்கும்
அங்கழ கச்சுதை1 மாடக்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

பாடம் : 1 அங்களபச்சுதை 2

தண்ணறு2 மத்தமுங் கூவிளமும்
வெண்டலை மாலையுந் தாங்கியார்க்கும்
நண்ணல் அரியநள் ளாறுடைய
நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்
புண்ணிய வாணரும் மாதவரும்
புகுந்துட னேத்தப் புனையிழையார்
அண்ணலின் பாட லெடுக்குங்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

பாடம் : 2 தண்ணுறு 3

பூவினில் வாசம் புனலிற்பொற்புப்
புதுவிரைச் சாந்தினின் நாற்றத்தோடு
நாவினிற் பாடல்நள் ளாறுடைய
நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்
தேவர்கள் தானவர் சித்தர்விச்சா
தரர்கணத் தோடுஞ் சிறந்துபொங்கி
ஆவினில் ஐந்துகந் தாட்டுங்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 4

செம்பொன்செய் மாலையும் வாசிகையுந்
திருந்து புகையு மவியும்பாட்டும்
நம்பும்பெருமைநள் ளாறுடைய
நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்
உம்பரும் நாக ருலகந்தானும்
ஒலிகடல் சூழ்ந்த வுலகத்தோரும்
அம்புத நால்களால் நீடுங்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 5

பாகமுந் தேவியை வைத்துக்கொண்டு
பைவிரி துத்திப் பரியபேழ்வாய்
நாகமும் பூண்டநள் ளாறுடைய
நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்
போகமும் நின்னை மனத்துவைத்துப்
புண்ணியர்நண்ணும் புணர்வுபூண்ட
ஆகமு டையவர் சேருங்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 6

கோவண ஆடையும் நீறுப்பூச்சுங்
கொடுமழு ஏந்தலுஞ் செஞ்சடையும்
நாவணப் பாட்டுநள் ளாறுடைய
நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்
பூவண மேனி இளையமாதர்
பொன்னும் மணியுங் கொழித்தெடுத்து
ஆவண வீதியி லாடுங்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 7

இலங்கை இராவணன் வெற்பெடுக்க
எழில்விர லூன்றி யிசைவிரும்பி
நலங்கொளச் சேர்ந்தநள் ளாறுடைய
நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்
புலன்களைச் செற்றுப் பொறியைநீக்கிப்
புந்தியி லுந்நினைச் சிந்தைசெய்யும்
அலங்கல்நல் லார்கள் அமருங்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 8

பணியுடை மாலும் மலரினோனும்
பன்றியும் வென்றிப் பறவையாயும்
நணுகல் அரியநள் ளாறுடைய
நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்
மணியொலி சங்கொலி யோடுமற்றை
மாமுர சின்னொலி யென்றும்ஓவா
தணிகிளர் வேந்தர் புகுதுங்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 9

தடுக்குடைக் கையருஞ் சாக்கியருஞ்
சாதியில் நீங்கிய வத்தவத்தர்
நடுக்குற நின்றநள் ளாறுடைய
நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்
எடுக்கும் விழவும்நன் னாள்விழவும்
இரும்பலி யின்பினோ3 டெத்திசையும்
அடுக்கும் பெருமைசேர் மாடக்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

பாடம் : 3 பலியன்பினோ 10

அன்புடை யானை அரனைக்கூடல்
ஆலவாய் மேவிய தென்கொலென்று
நன்பொனை நாதனை நள்ளாற்றானை
நயம்பெறப் போற்றி நலங்குலாவும்
பொன்புடை சூழ்தரு மாடக்காழிப்
பூசுரன் ஞானசம் பந்தன்சொன்ன
இன்புடைப் பாடல்கள் பத்தும்வல்லார்
இமையவ ரேத்த இருப்பர்தாமே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment