பாற லைத்த படுவெண் பாடல் வரிகள் (para laitta patuven) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் அன்னியூர் – பொன்னூர் தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு வடகரை
தலம் : அன்னியூர் – பொன்னூர்
சுவாமி : ஆபத்சகாயேசுவரர்
அம்பாள் : பெரியநாயகி

பாற லைத்த படுவெண்

பாற லைத்த
படுவெண் டலையினன்
நீற லைத்தசெம்
மேனியன் நேரிழை
கூற லைத்தமெய்
கோளர வாட்டிய
ஆற லைத்த
சடைஅன்னி யூரரே. 1

பண்டொத் தமொழி
யாளையோர் பாகமாய்
இண்டைச் செஞ்சடை
யன்னிருள் சேர்ந்ததோர்
கண்டத் தன்கரி
யின்னுரி போர்த்தவன்
அண்டத் தப்புறத்
தான்அன்னி யூரரே. 2

பரவி நாளும்
பணிந்தவர் தம்வினை
துரவை யாகத்
துடைப்பவர் தம்மிடங்
குரவம் நாறுங்
குழலுமை கூறராய்
அரவ மாட்டுவர்
போல்அன்னி யூரரே. 3

வேத கீதர்விண்
ணோர்க்கும் உயர்ந்தவர்
சோதி வெண்பிறை
துன்று சடைக்கணி
நாதர் நீதியி
னாலடி யார்தமக்
காதி யாகிநின்
றார்அன்னி யூரரே. 4

எம்பி ரான்இமை
யோர்கள் தமக்கெலாம்
இன்ப ராகி
இருந்தவெம் மீசனார்
துன்ப வல்வினை
போகத் தொழுமவர்க்
கன்ப ராகிநின்
றார்அன்னி யூரரே. 5

வெந்த நீறுமெய்
பூசுநன் மேனியர்
கந்த மாமலர்
சூடுங் கருத்தினர்
சிந்தை யார்சிவ
னார்செய்ய தீவண்ணர்
அந்த ணாளர்கண்
டீர்அன்னி யூரரே. 6

ஊனை யார்தலை
யிற்பலி கொண்டுழல்
வானை வானவர்
தாங்கள் வணங்கவே
தேனை யார்குழ
லாளையொர் பாகமா
ஆனை யீருரி
யார்அன்னி யூரரே. 7

காலை போய்ப்பலி
தேர்வர் கண்ணார்நெற்றி
மேலை வானவர்
வந்து விரும்பிய
சோலை சூழ்புறங்
காடரங் காகவே
ஆலின் கீழறத்
தார்அன்னி யூரரே. 8

எரிகொள் மேனியர்
என்பணிந் தின்பராய்த்
திரியு மூவெயில்
தீயெழச் செற்றவர்
கரிய மாலொடு
நான்முகன் காண்பதற்
கரிய ராகிநின்
றார்அன்னி யூரரே. 9

வஞ்ச ரக்கன்
கரமுஞ் சிரத்தொடும்
அஞ்சு மஞ்சுமோ
ராறுநான் கும்மிறப்
பஞ்சின் மெல்விர
லாலடர்த் தாயிழை
அஞ்ச லஞ்சலென்
றார்அன்னி யூரரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment