ஓதிமா மலர்கள் பாடல் வரிகள் (otima malarkal) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவண்ணாமலை தலம் நடுநாடு நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : நடுநாடு
தலம் : திருவண்ணாமலை
சுவாமி : அருணாசலேசுவரர்
அம்பாள் : உண்ணாமுலையம்மை

ஓதிமா மலர்கள்

ஓதிமா மலர்கள் தூவி
உமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கும் எண்டோ ள்
சுடர்மழுப் படையி னானே
ஆதியே அமரர் கோவே
அணியணா மலையு ளானே
நீதியால் நின்னை யல்லால்
நினையுமா நினைவி லேனே. 1

பண்டனை வென்ற இன்சொற்
பாவையோர் பங்க நீல
கண்டனே கார்கொள் கொன்றைக்
கடவுளே கமல பாதா
அண்டனே அமரர் கோவே
அணியணா மலையு ளானே
தொண்டனேன் உன்னை அல்லாற்
சொல்லுமா சொல்லி லேனே. 2

உருவமும் உயிரு மாகி
ஓதிய உலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய்
நின்றவெம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியும் அண்ணா
மலையுளாய் அண்டர் கோவே
மருவிநின் பாத மல்லான்
மற்றொரு மாடி லேனே. 3

பைம்பொனே பவளக் குன்றே
பரமனே பால்வெண் ணீற்றாய்
செம்பொனே மலர்செய் பாதா
சீர்தரு மணியே மிக்க
அம்பொனே கொழித்து வீழும்
அணியணா மலையு ளானே
என்பொனே உன்னை யல்லால்
ஏதும்நான் நினைவி லேனே. 4

பிறையணி முடியி னானே
பிஞ்ஞகா பெண்ணோர் பாகா
மறைவலா இறைவா வண்டார்
கொன்றையாய் வாம தேவா
அறைகழல் அமர ரேத்தும்
அணியணா மலையு ளானே
இறைவனே உன்னை யல்லா
லியாதுநான் நினைவி லேனே. 5

புரிசடை முடியின் மேலோர்
பொருபுனற் கங்கை வைத்துக்
கரியுரி போர்வை யாகக்
கருதிய கால காலா
அரிகுலம் மலிந்த அண்ணா
மலையுளாய் அலரின் மிக்க
வரிமிகு வண்டு பண்செய்
பாதநான் மறப்பி லேனே. 6

இரவியும் மதியும் விண்ணும்
இருநிலம் புனலுங் காற்றும்
உரகமார் பவனம் எட்டுந்
திசையொளி உருவ மானாய்
அரவுமிழ் மணிகொள் சோதி
அணியணா மலையு ளானே
பரவுநின் பாத மல்லாற்
பரமநான் பற்றி லேனே. 7

பார்த்தனுக் கன்று நல்கிப்
பாசுப தத்தை ஈந்தாய்
நீர்த்ததும் புலாவு கங்கை
நெடுமுடி நிலாவ வைத்தாய்
ஆர்த்துவந் தீண்டு கொண்டல்
அணியணா மலையு ளானே
தீர்த்தனே நின்றன் பாதத்
திறமலாற் றிறமி லேனே. 8

பாலுநெய் முதலா மிக்க
பசுவில்ஐந் தாடு வானே
மாலுநான் முகனுங் கூடிக்
காண்கிலா வகையுள் நின்றாய்
ஆலுநீர் கொண்டல் பூகம்
அணியணா மலையு ளானே
வாலுடை விடையாய் உன்றன்
மலரடி மறப்பி லேனே. 9

இரக்கமொன் றியாது மில்லாக்
காலனைக் கடிந்த எம்மான்
உரத்தினால் வரையை ஊக்க
ஒருவிரல் நுதியி னாலே
அரக்கனை நெரித்த அண்ணா
மலையுளாய் அமர ரேறே
சிரத்தினால் வணங்கி யேத்தித்
திருவடி மறப்பி லேனே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment