ஒருத்த னைமூ பாடல் வரிகள் (orutta naimu) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் கடுவாய்க்கரைப்புத்தூர் – ஆண்டான்கோவில் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : கடுவாய்க்கரைப்புத்தூர் – ஆண்டான்கோவில்
சுவாமி : சொர்ணபுரீஸ்வரர்

ஒருத்த னைமூ

ஒருத்த னைமூ
வுலகொடு தேவர்க்கும்
அருத்த னையடி
யேன்மனத் துள்ளமர்
கருத்த னைக்கடு
வாய்ப்புன லாடிய
திருத்த னைப்புத்தூர்
சென்றுகண் டுய்ந்தெனே. 1

யாவ ருமறி
தற்கரி யான்றனை
மூவ ரின்முத
லாகிய மூர்த்தியை
நாவின் நல்லுரை
யாகிய நாதனைத்
தேவனைப் புத்தூர்
சென்றுகண் டுய்ந்தெனே. 2

அன்ப னையடி
யாரிடர் நீக்கியைச்
செம்பொ னைத்திக
ழுந்திருக் கச்சியே
கம்ப னைக்கடு
வாய்க்கரைத் தென்புத்தூர்
நம்ப னைக்கண்டு
நானுய்யப் பெற்றெனே. 3

மாத னத்தைமா
தேவனை மாறிலாக்
கோத னத்திலைந்
தாடியை வெண்குழைக்
காத னைக்கடு
வாய்க்கரைத் தென்புத்தூர்
நாத னைக்கண்டு
நானுய்யப் பெற்றெனே. 4

குண்டு பட்டகுற்
றந்தவிர்த் தென்னையாட்
கொண்டு நற்றிறங்
காட்டிய கூத்தனைக்
கண்ட னைக்கடு
வாய்க்கரைத் தென்புத்தூர்
அண்ட னைக்கண்
டருவினை யற்றெனே. 5

பந்த பாச
மறுத்தெனை யாட்கொண்ட
மைந்த னைம்மண
வாளனை மாமலர்க்
கந்த நீர்க்கடு
வாய்க்கரைத் தென்புத்தூர்
எந்தை யீசனைக்
கண்டினி தாயிற்றே. 6

உம்ப ரானை
உருத்திர மூர்த்தியை
அம்ப ரானை
அமலனை ஆதியைக்
கம்பு நீர்க்கடு
வாய்க்கரைத் தென்புத்தூர்
எம்பி ரானைக்கண்
டின்பம தாயிற்றே. 7

மாசார் பாச
மயக்கறு வித்தெனுள்
நேச மாகிய
நித்த மணாளனைப்
பூச நீர்க்கடு
வாய்க்கரைத் தென்புத்தூர்
ஈச னேயென
இன்பம தாயிற்றே. 8

இடுவா ரிட்ட
கவளங் கவர்ந்திரு
கடுவா யிட்டவர்
கட்டுரை கொள்ளாதே
கடுவாய்த் தென்கரைப்
புத்தூ ரடிகட்காட்
படவே பெற்றுநான்
பாக்கியஞ் செய்தெனே. 9

அரக்க னாற்றல்
அழித்தவன் பாடல்கேட்
டிரக்க மாகி
அருள்புரி யீசனைத்
திரைக்கொள் நீர்க்கடு
வாய்க்கரைத் தென்புத்தூர்
இருக்கு நாதனைக்
காணப்பெற் றுய்ந்தெனே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment