கல்லால் நீழல் பாடல் வரிகள் (kallal nilal) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் தனித்திருவிருக்குக்குறள் தலம் பொதுப் பதிகங்கள் நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : பொதுப் பதிகங்கள்
தலம் : தனித்திருவிருக்குக்குறள்கல்லால் நீழல்

கல்லால் நீழல், அல்லாத் தேவை
நல்லார் பேணார், அல்லோம் நாமே. 1

கொன்றை சூடி, நின்ற தேவை
அன்றி யொன்று, நன்றி லோமே. 2

கல்லா நெஞ்சின், நில்லான் ஈசன்
சொல்லா தாரோ, டல்லோம் நாமே. 3

கூற்று தைத்த, நீற்றி னானைப்
போற்று வார்கள், தோற்றி னாரே. 4

காட்டு ளாடும், பாட்டு ளானை
நாட்டு ளாருந், தேட்டு ளாரே. 5

தக்கன் வேள்விப், பொக்கந் தீர்த்த
மிக்க தேவர், பக்கத் தோமே. 6

பெண்ணா ணாய, விண்ணோர் கோவை
நண்ணா தாரை, எண்ணோம் நாமே. 7

தூர்த்தன் வீரம், தீர்த்த கோவை
ஆத்த மாக, ஏத்தி னோமே. 8

பூவி னானுந், தாவி னானும்
நாவி னாலும், ஓவி னாரே. 9

மொட்ட மணர், கட்ட தேரர்
பிட்டர் சொல்லை, விட்டு ளோமே. 10

அந்தண் காழிப், பந்தன் சொல்லைச்
சிந்தை செய்வோர், உய்ந்து ளோரே. 11

திருச்சிற்றம்பலம்

Leave a Comment