கால பாசம் பாடல் வரிகள் (kala pacam) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவாட்போக்கி , ரத்னகிரி – அய்யர்மலை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவாட்போக்கி , ரத்னகிரி – அய்யர்மலை
சுவாமி : இரத்தினகிரீஸ்வரர்
அம்பாள் : சுரும்பார்குழலி

கால பாசம்

கால பாசம்
பிடித்தெழு தூதுவர்
பால கர்விருத்
தர்பழை யாரெனார்
ஆல நீழ
லமர்ந்தவாட் போக்கியார்
சீல மார்ந்தவர்
செம்மையுள் நிற்பரே. 1

விடுத்த தூதுவர்
வந்து வினைக்குழிப்
படுத்த போது
பயனிலை பாவிகாள்
அடுத்த கின்னரங்
கேட்கும்வாட் போக்கியை
எடுத்து மேத்தியும்
இன்புறு மின்களே. 2

வந்திவ் வாறு
வளைத்தெழு தூதுவர்
உந்தி யோடி
நரகத் திடாமுனம்
அந்தி யின்னொளி
தாங்கும்வாட் போக்கியார்
சிந்தி யாவெழு
வார்வினை தீர்ப்பரே. 3

கூற்றம் வந்து
குமைத்திடும் போதினாற்
தேற்றம் வந்து
தெளிவுற லாகுமே
ஆற்ற வுமருள்
செய்யும்வாட் போக்கிபால்
ஏற்று மின்விளக்
கையிருள் நீங்கவே. 4

மாறு கொண்டு
வளைத்தெழு தூதுவர்
வேறு வேறு
படுப்பதன் முன்னமே
ஆறு செஞ்சடை
வைத்தவாட் போக்கியார்க்
கூறி யூறி
உருகுமென் னுள்ளமே. 5

கான மோடிக்
கடிதெழு தூதுவர்
தான மோடு
தலைபிடி யாமுனம்
ஆனஞ் சாடி
யுகந்தவாட் போக்கியார்
ஊன மில்லவர்க்
குண்மையில் நிற்பரே. 6

பார்த்துப் பாசம்
பிடித்தெழு தூதுவர்
கூர்த்த வேலாற்
குமைப்பதன் முன்னமே
ஆர்த்த கங்கை
யடக்கும்வாட் போக்கியார்
கீர்த்தி மைகள்
கிளர்ந்துரை மின்களே. 7

நாடி வந்து
நமன்தமர் நல்லிருள்
கூடி வந்து
குமைப்பதன் முன்னமே
ஆடல் பாடல்
உகந்தவாட் போக்கியை
வாடி யேத்தநம்
வாட்டந் தவிருமே. 8

கட்ட றுத்துக்
கடிதெழு தூதுவர்
பொட்ட நூக்கிப்
புறப்படா முன்னமே
அட்ட மாமலர்
சூடும்வாட் போக்கியார்க்
கிட்ட மாகி
யிணையடி யேத்துமே. 9

இரக்க முன்னறி
யாதெழு தூதுவர்
பரக்க ழித்தவர்
பற்றுதன் முன்னமே
அரக்க னுக்கருள்
செய்தவாட் போக்கியார்
கரப்ப துங்கரப்
பாரவர் தங்கட்கே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment