எற்றான் மறக்கேன் பாடல் வரிகள் (erran marakken) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்புக்கொளியூர் – அவிநாசி தலம் கொங்குநாடு நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : கொங்குநாடு
தலம் : திருப்புக்கொளியூர் – அவிநாசிஎற்றான் மறக்கேன்

எற்றான் மறக்கேன் எழுமைக்கும்
எம்பெரு மானையே
உற்றாய் என்றுன்னையே உள்குகின்
றேன்உணர்ந் துள்ளத்தால்
புற்றா டரவா புக்கொளி
யூரவி நாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதி
யேபர மேட்டியே. 1

வழிபோவார் தம்மோடும் வந்துடன்
கூடிய மாணிநீ
ஒழிவ தழகோ சொல்லாய்
அருளோங்கு சடையானே
பொழிலாருஞ் சோலைப் புக்கொளி
யூரிற் குளத்திடை
இழியாக் குளித்த மாணிஎன்
னைக்கிறி செய்ததே. 2

எங்கேனும் போகினும் எம்பெரு
மானை நினைந்தக்கால்
கொங்கே புகினுங் கூறைகொண்
டாறலைப் பார்இலை
பொங்கா டரவா புக்கொளி
யூரவி நாசியே
எங்கோ னேஉனை வேண்டிக்கொள்
வேன்பிற வாமையே. 3

உரைப்பார் உரைஉகந் துள்கவல்
லார்தங்கள் உச்சியாய்
அரைக்கா டரவா ஆதியும்
அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளி
யூரவி நாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை
தரச்சொல்லு காலனையே. 4

அரங்காவ தெல்லா மாயிடு
காடது அன்றியும்
சரங்கோலை வாங்கி வரிசிலை
நாணியிற் சந்தித்துப்
புரங்கோட எய்தாய் புக்கொளி
யூரவி நாசியே
குரங்காடு சோலைக் கோயில்கொண்
டகுழைக் காதனே. 5

நாத்தா னும்உனைப் பாடல்அன்
றிநவி லாதெனாச்
சோத்தென்று தேவர் தொழநின்ற
சுந்தரச் சோதியாய்
பூத்தாழ் சடையாய் புக்கொளி
யூரவி நாசியே
கூத்தா உனக்குநான் ஆட்பட்ட
குற்றமுங் குற்றமே. 6

மந்தி கடுவனுக் குண்பழம்
நாடி மலைப்புறம்
சந்திகள் தோறுஞ்சலபுட்பம்
இட்டு வழிபடப்
புந்தி உறைவாய் புக்கொளி
யூரவி நாசியே
நந்தி உனைவேண்டிக் கொள்வேன்
நரகம் புகாமையே. 7

பேணா தொழிந்தேன் உன்னைஅல்
லாற்பிற தேவரைக்
காணா தொழிந்தேன் காட்டுதி
யேலின்னங் காண்பன்நான்
பூணாண் அரவா புக்கொளி
யூரவி நாசியே
காணாத கண்கள் காட்டவல்
லகறைக் கண்டனே. 8

நள்ளாறு தெள்ளா றரத்துறை
வாய்எங்கள் நம்பனே
வெள்ளாடை வேண்டாய் வேங்கையின்
தோலை விரும்பினாய்
புள்ளேறு சோலைப் புக்கொளி
யூரிற் குளத்திடை
உள்ளாடப் புக்க மாணியென்
னைக்கிறி செய்ததே. 9

நீரேற ஏறுநிமிர் புன்சடை
நின்மல மூர்த்தியைப்
போரேற தேறியைப் புக்கொளி
யூரவி நாசியைக்
காரேறு கண்டனைத் தொண்டன்
ஆரூரன் கருதிய
சீரேறு பாடல்கள் செப்பவல்
லார்க்கில்லை துன்பமே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment