சுற்றமொடு பற்றவை பாடல் வரிகள் (curramotu parravai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் கருப்பறியலூர் – தலைஞாயிறு தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு வடகரை
தலம் : கருப்பறியலூர் – தலைஞாயிறு
சுவாமி : குற்றம்பொறுத்தநாதர்
அம்பாள் : கோல்வளையம்மை

சுற்றமொடு பற்றவை

சுற்றமொடு பற்றவை
துயக்கற அறுத்துக்
குற்றமில் குணங்களொடு
கூடும்அடி யார்கள்
மற்றவரை வானவர்தம்
வானுலக மேற்றக்
கற்றவ னிருப்பது
கருப்பறிய லூரே. 1

வண்டணைசெய் கொன்றையது
வார்சடை கள்மேலே
கொண்டணைசெய் கோலமது
கோளரவி னோடும்
விண்டணைசெய் மும்மதிலும்
வீழ்தரவொ ரம்பால்
கண்டவ னிருப்பது
கருப்பறிய லூரே. 2

வேதமொடு வேதியர்கள்
வேள்விமுத லாகப்
போதினொடு போதுமலர்
கொண்டுபுனை கின்ற
நாதனென நள்ளிருண்முன்
ஆடுகுழை தாழும்
காதவ னிருப்பது
கருப்பறிய லூரே. 3

மடம்படு மலைக்கிறைவன்
மங்கையொரு பங்கன்
உடம்பினை விடக்கருதி
நின்றமறை யோனைத்
தொடர்ந்தணவு காலனுயிர்
காலவொரு காலால்
கடந்தவ னிருப்பது
கருப்பறிய லூரே. 4

ஒருத்தியுமை யோடுமொரு
பாகமது வாய
நிருத்தனவன் நீதியவன்
நித்தன்நெறி யாய
விருத்தனவன் வேதமென
அங்கமவை யோதும்
கருத்தவ னிருப்பது
கருப்பறிய லூரே. 5

விண்ணவர்கள் வெற்பரசு
பெற்றமகள் மெய்த்தேன்
பண்ணமரும் மென்மொழியி
னாளையணை விப்பான்
எண்ணிவரு காமனுடல்
வேவஎரி காலும்
கண்ணவ னிருப்பது
கருப்பறிய லூரே. 6

ஆதியடி யைப்பணிய
அப்பொடு மலர்ச்சேர்
சோதியொளி நற்புகை
வளர்க்குவடு புக்குத்
தீதுசெய வந்தணையும்
அந்தகன் அரங்கக்
காதினன் இருப்பது
கருப்பறிய லூரே. 7

வாய்ந்தபுகழ் விண்ணவரும்
மண்ணவரும் அஞ்சப்
பாய்ந்தமர்செ யுந்தொழிலி
லங்கைநகர் வேந்தற்
கேய்ந்தபுயம் அத்தனையும்
இற்றுவிழ மேனாள்
காய்ந்தவ னிருப்பது
கருப்பறிய லூரே. 8

பரந்தது நிரந்துவரு
பாய்திரைய கங்கை
கரந்தொர்சடை மேன்மிசை
யுகந்தவளை வைத்து
நிரந்தரம் நிரந்திருவர்
நேடியறி யாமல்
கரந்தவ னிருப்பது
கருப்பறிய லூரே. 9

அற்றமறை யாவமண
ராதமிலி புத்தர்
சொற்றமறி யாதவர்கள்
சொன்னசொலை விட்டுக்
குற்றமறி யாதபெரு
மான்கொகுடிக் கோயில்
கற்றென இருப்பது
கருப்பறிய லூரே. 10

நலந்தரு புனற்புகலி
ஞானசம் பந்தன்
கலந்தவர் கருப்பறியல்
மேயகட வுள்ளைப்
பலந்தரு தமிழ்க்கிளவி
பத்துமிவை கற்று
வலந்தரு மவர்க்குவினை
வாடலெளி தாமே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment