ஆதியன் ஆதிரை யன்அயன் பாடல் வரிகள் (atiyan atirai yanayan) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருநனிபள்ளி – புஞ்சை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருநனிபள்ளி – புஞ்சைஆதியன் ஆதிரை யன்அயன்

ஆதியன் ஆதிரை யன்அயன்
மால்அறி தற்கரிய
சோதியன் சொற்பொரு ளாய்ச்சுருங்
காமறை நான்கினையும்
ஓதியன் உம்பர்தங் கோனுல
கத்தினுள் எவ்வுயிர்க்கும்
நாதியன் நம்பெரு மான்நண்ணும்
ஊர்நனி பள்ளியதே. 1

உறவிலி ஊன மிலிஉண
ரார்புரம் மூன்றெரியச்
செறுவிலி தன்னினை வார்வினை
யாயின தேய்ந்தழிய
அறவில கும்மரு ளான்மரு
ளார்பொழில் வண்டறையும்
நறவிரி கொன்றையி னான்நண்ணும்
ஊர்நனி பள்ளியதே. 2

வானுடை யான்பெரி யான்மனத்
தாலும்நினைப் பரியான்
ஆனிடை ஐந்தமர்ந் தான்அணு
வாகியோர் தீயுருக்கொண்
டூனுடை இவ்வுட லம்ஒடுங்
கிப்புகுந் தான்பரந்தான்
நானுடை மாடெம் பிரான்நண்ணும்
ஊர்நனி பள்ளியதே. 3

ஓடுடை யன்கல னாவுடை
கோவண வன்உமையோர்
பாடுடை யன்பலி தேர்ந்துண்ணும்
பண்புடை யன்பயிலக்
காடுடை யன்னிட மாமலை
ஏழுங் கருங்கடல்சூழ்
நாடுடை நம்பெரு மான்நண்ணும்
ஊர்நனி பள்ளியதே. 4

பண்ணற் கரிய தொருபடை
ஆழி தனைப்படைத்துக்
கண்ணற் கருள்புரிந் தான்கரு
தாதவர் வேள்விஅவி
உண்ணற் கிமையவ ரையுருண்
டோட உதைத்துகந்து
நண்ணற் கரிய பிரான்நண்ணும்
ஊர்நனி பள்ளியதே. 5

மல்கிய செஞ்சடை மேல்மதி
யும்மர வும்முடனே
புல்கிய ஆரணன் எம்புனி
தன்புரி நூல்விகிர்தன்
மெல்கிய விற்றொழி லான்விருப்
பன்பெரும் பார்த்தனுக்கு
நல்கிய நம்பெரு மான்நண்ணும்
ஊர்நனி பள்ளியதே. 6

அங்கமோ ராறவை யும்அரு
மாமறை வேள்விகளும்
எங்கும் இருந்தந் தணர்எரி
மூன்றவை ஓம்புமிடம்
பங்கய மாமுகத் தாளுமை
பங்கன் உறைகோயில்
செங்கயல் பாயும் வயற்றிரு
ஊர்நனி பள்ளியதே. 7

திங்கட் குறுந்தெரி யற்றிகழ்
கண்ணியன் நுண்ணியனாய்
நங்கட் பிணிகளை வான்அரு
மாமருந் தேழ்பிறப்பும்
மங்கத் திருவிர லால்அடர்த்
தான்வல் லரக்கனையும்
நங்கட் கருளும் பிரான்நண்ணும்
ஊர்நனி பள்ளியதே. 8

ஏன மருப்பினொ டும்மெழில்
ஆமையும் பூண்டுகந்து
வான மதிளர ணம்மலை
யேசிலை யாவளைத்தான்
ஊனமில் காழிதன் னுள்ளுயர்
ஞானசம் பந்தற்கன்று
ஞானம் அருள்புரிந் தான்நண்ணும்
ஊர்நனி பள்ளியதே. 9

காலமும் நாழிகை யுந்நனி
பள்ளி மனத்தினுள்கி
கோலம தாயவ னைக்குளிர்
நாவல ஊரன்சொன்ன
மாலை மதித்துரைப் பார்மண்
மறந்துவா னோருலகிற்
சாலநல் லின்பமெய் தித்தவ
லோகத் திருப்பவரே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment