அழல்நீர் ஒழுகி யனைய பாடல் வரிகள் (alalnir oluki yanaiya) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருச்சோற்றுத்துறை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருச்சோற்றுத்துறைஅழல்நீர் ஒழுகி யனைய

அழல்நீர் ஒழுகி
யனைய சடையும்
உழையீ ருரியும்
உடையான் இடமாம்
கழைநீர் முத்துங்
கனகக் குவையுஞ்
சுழல்நீர்ப் பொன்னிச்
சோற்றுத் துறையே. 1

பண்டை வினைகள்
பறிய நின்ற
அண்ட முதல்வன்
அமலன் இடமாம்
இண்டை கொண்டன்
பிடைய றாத
தொண்டர் பரவுஞ்
சோற்றுத் துறையே. 2

கோல அரவுங்
கொக்கின் இறகும்
மாலை மதியும்
வைத்தான் இடமாம்
ஆலும் மயிலும்
ஆடல் அளியுஞ்
சோலை தருநீர்ச்
சோற்றுத் துறையே. 3

பளிக்குத் தாரை
பவள வெற்பிற்
குளிக்கும் போல்நூற்
கோமாற் கிடமாம்
அளிக்கும் ஆர்த்தி
அல்லான் மதுவந்
துளிக்குஞ் சோலைச்
சோற்றுத் துறையே. 4

உதையுங் கூற்றுக்
கொல்கா விதிக்கு
வதையுஞ் செய்த
மைந்தன் இடமாம்
திதையுந் தாதுந்
தேனுஞ் ஞிமிறுந்
துதையும் பொன்னிச்
சோற்றுத் துறையே. 5

ஓதக் கடல்நஞ்
சினையுண் டிட்ட
பேதைப் பெருமான்
பேணும் பதியாம்
சீதப் புனலுண்
டெரியைக் காலுஞ்
சூதப் பொழில்சூழ்
சோற்றுத் துறையே. 6

இறந்தார் என்பும்
எருக்குஞ் சூடிப்
புறங்காட் டாடும்
புனிதன் கோயில்
சிறந்தார் சுற்றந்
திருவென் றின்ன
துறந்தார் சேருஞ்
சோற்றுத் துறையே. 7

காமன் பொடியாக்
கண்ணொன் றிமைத்த
ஓமக் கடலார்
உகந்த இடமாம்
தேமென் குழலார்
சேக்கை புகைத்த
தூமம் விசும்பார்
சோற்றுத் துறையே. 8

இலையால் அன்பால்
ஏத்து மவர்க்கு
நிலையா வாழ்வை
நீத்தார் இடமாம்
தலையாற் றாழுந்
தவத்தோர்க் கென்றுந்
தொலையாச் செல்வச்
சோற்றுத் துறையே. 9

சுற்றார் தருநீர்ச்
சோற்றுத் துறையுள்
முற்றா மதிசேர்
முதல்வன் பாதத்
தற்றார் அடியார்
அடிநாய் ஊரன்
சொற்றான் இவைகற்
றார்துன் பிலரே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment