Adikkondar Andha Vedikkai kaana kan ayiram vendamo Keerthanam Tamil Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

============

இராகம்-மோகனம்-ஏகதாளம்.

பல்லவி

ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ

அனுபல்லவி

நாடித் துதிப்பவர் பங்கில் உறைபவர்

நம்பர் திருச்செம்பொன் அம்பலவாணர் (ஆடிக்)

சரணம் 1

பங்கயச் சிலம்பைந்தாடப் பாதச் சலங்கைகள் கிண் கிணென்றாடப்

பொங்குமுடனே உரித்து உடுத்த புலித்தோல் அசைந்தாட செங்கையில் ஏந்திய மான் மழுவாட

செம்பொற்குழை கண் முயலகனாட

கங்கை இளம்பிறை செஞ்சடையாடக்

கனக சபை தனிலே

சரணம் 2

ஆற நவமணிமாலைகளாட

ஆடும் அரவம் படம் விரித்தாட

சீரணிக் கொன்றை மலர்த் தொடையாடச்

சிதம்பரத் தேராட

பேரணி வேதியர் தில்லை மூவாயிரம்

பேர்களும் பூசித்துக் கொண்டு நின்றாட

காரணி காளி எதிர்த்து நின்றாடக்

கனக சபை தனிலே

சரணம் 3

நிர்த்த கணபதி வேலர் நின்றாட

நின்றயன் மாலுடன் இந்திரன் ஆட

முப்பத்து முக்கோடி தேவருடனே முனிவரும் நின்றாட

மெய்ப் பத்தி மேவும் பதஞ்சலியாட

வியாக்ரம பாதரும் நந்தியும் ஆட

ஒப்பற்ற சிவகாமியம்மையும் கூடவே நின்றாட

============

About Adikkondar Andha Vedikkai Keerthanam

ஆடிக் கொண்டார் கீர்த்தனம் திரு.முத்து தாண்டவர் அவர்களால் (1560-1640, தேதிகள் நிச்சயமற்றது) இயற்ற‌ப்பட்டது.

‘அவரது நடனத்தின் அற்புதத்தைக் காண ஆயிரம் கண்கள் வேண்டாமா?’ என்கிறார் கவிஞர். இறைவனை பிரார்த்தனையில் தேடுபவர்கள் அனைவரிடமும் வசிப்பவர் என்று அவர் விவரிக்கிறார், இதனால் அவரை முடிந்தவரை அணுகக்கூடியதாக ஆக்குகிறார். சிவனைப் பற்றிய கவிஞரின் வர்ணனை அவர் விவரிக்கும் நடனத்தைப் போலவே தாளமாக இருக்கிறது.

இந்த | adikkondar andha vedikkai kaana keerthanam lyrics பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, சிவன் பாடல்கள், சிவன் பாடல் வரிகள், Carnatic Songs, Muthu Thandavar Compositions ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment