Acha pathu thiruvasagam lyrics in tamil

அச்சப்பத்து (Acha Pathu thiruvasagam)

அருளியவர் : மாணிக்கவாசகர்
தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு : சோழநாடு காவிரி வடகரை

சிறப்பு: ஆனந்தமுறுதல்; அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

திருச்சிற்றம்பலம்

புற்றில்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம்
மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல்
பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென
நினைந்தெம் பெம்மாற்கு
அற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம்
அஞ்சு மாறே. 1

வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல்
கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா எம்பிரான்
தம்பிரா னாம்
திருவுரு அன்றி மற்றோர் தேவரெத்
தேவ ரென்ன
அருவரா தவரைக் கண்டால் அம்மநாம்
அஞ்சு மாறே. 2

வன்புலால் வேலும் அஞ்சேன் வ ளைக்கையார்
கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி அம்பலத்
தாடு கின்ற
என்பொலா மணியை ஏத்தி இனிதருள்
பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம்
அஞ்சு மாறே. 3

கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி
முறுவல் அஞ்சேன்
வெளியநீ றாடும் மேனி வேதியன்
பாதம் நண்ணித்
துளியுலாம் கண்ணராகித் தொழுதழு
துள்ளம் நெக்கிங்கு
அளியிலா தவரைக் கண்டால் அம்மநாம்
அஞ்சு மாறே. 4

பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ
டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியினான்தன் தொழும்பரோ
டழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்துங் காணாச்
சேவடி பரவி வெண்ணீறு
அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம்
அஞ்சு மாறே. 5

வாளுலாம் எரியும் அஞ்சேன் வரைபுரண்
டிடினும் அஞ்சேன்
தோளுலாம் நீற்றன் ஏற்றன் சொற்பதம்
கடந்த அப்பன்
தாளதா மரைகளேத்தித் தடமலர்
புனைந்து நையும்
ஆளலா தவரைக் கண்டால் அம்மநாம்
அஞ்சு மாறே. 6

தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை
முன்னம் அஞ்சேன்
புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்த
அம்பலத்து ளாடும்
முகைநகைக் கொன்றைமாலை முன்னவன்
பாத மேத்தி
அகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம்
அஞ்சு மாறே. 7

தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி
உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர்
நண்ண மாட்டாச்
செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி
திருக்க மாட்டா
அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம்
அஞ்சு மாறே. 8

மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ
டுறவும் அஞ்சேன்
நஞ்சமே அமுத மாக்கும் நம்பிரான்
எம்பி ரானாய்ச்
செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம்
தீட்ட மாட்டாது
அஞ்சுவா ரவரைக் கண்டால் அம்மநாம்
அஞ்சு மாறே. 9

கோணிலா வாளி அஞ்சேன் கூற்றுவன்
சீற்றம் அஞ்சேன்
நீணிலா அணியினானை நினைந்துநைந்
துருகி நெக்கு
வாணிலாங் கண்கள் சோர வாழ்த்திநின்
றேத்த மாட்டா
ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம்
அஞ்சு மாறே. 10

Leave a Comment