Aanai mugam song lyrics in tamil

ஆனைமுகம் ஆனவனின் அன்பு மிக்க தந்தையே பாடல் வரிகள்

ஆனைமுகம் ஆனவனின் அன்பு மிக்க தந்தையே
அவனியென்று உன்னைச் சுற்ற கனியைத் தந்த விந்தையே
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
நெற்றிக் கண்ணின் நெருப்பில் பிள்ளை பெற்றெடுத்த தந்தையே
நெற்றிக் கண்ணால் மன்மதனைச் சுட்டெரித்த விந்தையே
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
இளைய பிள்ளை முருகனிடம் சேதி கேட்ட தந்தையே
சேதி சொன்ன பிள்ளையினை சுவாமி என்ற விந்தையே
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

குறுஞ் சிரிப்பால் உமை மனதைக் கவர்ந்திழுத்த தந்தையே
ஒரு சிரிப்பால் முப்புரத்தை எரித்து விட்ட விந்தையே
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
படித் துறையில் பிள்ளை அழ ஓடி வந்த தந்தையே
அம்மை யப்பனாகி நின்று அருள் புரிந்த விந்தையே
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
பிரசவத்தில் பெண் துடிக்க விரைந்து வந்த தந்தையே
பிள்ளைப் பேறு பார்க்கத் தானே தாயுமான விந்தையே
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
சுடலைப் பொடி பூசிக் கொண்டு நடனமிடும் தந்தையே
அடியும் முடியும் காணலின்றி ஓங்கி நின்ற விந்தையே
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

Leave a Comment