Vel vanthu vinai theerka mayil vanthu vazhi kaatta Songs இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் வேல்வந்து வினைதீர்க்க மயில்வந்து வழிகாட்ட காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

வேல்வந்து வினைதீர்க்க மயில்வந்து வழிகாட்ட முருகன் பாடல் வரிகள். கவிஞர்.திரு. உளுந்தூர்பேட்டை சண்முகம் இசை: திரு.வைத்தியநாதன்

பாடியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள். Vel vanthu vinai theerka mayil vanthu vazhi kaatta Songs – Murugan Devotional Song lyrics.

============

வேல்வந்து வினைதீர்க்க

மயில்வந்து வழிகாட்ட

கோயிலுக்குள் சென்றேனடி – குமரன்

கொலுவிருக்கக் கண்டேனடி

(வேல்வந்து)

பால்கொண்டு நீராட்டி

பழம்தந்து பாராட்டி

பூமாலை போட்டேனடி

திருப்புகழ்மாலை கேட்டேனடி

பங்குனியின் உத்திரத்தில்

பழனிமலை உச்சியினில் – கந்தன்

எனைக் கண்டானடி

சிந்தையில் நின்றானடி

வேலழகும் மயிலழகும்

வீற்றிருக்கும் பேரழகும்

காலமெல்லாம் இருக்குமடி – அந்தக்

காட்சியென்றும் இனிக்குமடி!

(வேல்வந்து)

இந்த | vel vanthu vinai theerka பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs, Sulamangalam Sisters Songs வேல்வந்து வினைதீர்க்க மயில்வந்து வழிகாட்ட போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment