Vaigarai pozhuthil vizhithein – P Suseela Songs இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் வைகறைப் பொழுதில் விழித்தேன் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

வைகறைப் பொழுதில் விழித்தேன் – அந்த வடிவேல் முருகனை நினைத்தேன் பாடல் வரிகள். பி.சுசீலா பாடிய‌ முருகன் பக்திப் பாடல். Vaigarai pozhuthil vizhithein – P Suseela Songs – Murugan Devotional Song lyrics.

============

வைகறைப் பொழுதில் விழித்தேன் – அந்த

வடிவேல் முருகனை நினைத்தேன்

நெஞ்சத்தை மலராய்த் தொடுத்தேன் – அவன்

நினைவில் காலத்தைக் கழித்தேன்!

(வைகறைப் பொழுதில்)

திருப்புகழ்த் தேரில் இழுத்தேன் – அதை

தினமும் மனத்தால் சுவைத்தேன் – என்

தேவைகள் யாவையும் உரைத்தேன் – அவன்

திருவருள் தந்தான் களித்தேன்!

(வைகறைப் பொழுதில்)

உள்ளத்தில் கோயிலை அமைத்தேன் – பக்தி

உணர்வில் ராகத்தை வளர்த்தேன்

ஓம் எனும் மந்தரம் படித்தேன் – அவன்

கருணையைப் பொழிந்தேன் மகிழ்ந்தேன்!

(வைகறைப் பொழுதில்)

சூடிடும் குறிஞ்சி மலராவான் – அவன்

ஏந்திடும் தீபத்தின் ஒளியாவான் – மெய்

அருள் வரும் ஞானக் களியாவான் – என்றும்

அவனே வாழ்வுக்கே உயிராவான்!

(வைகறைப் பொழுதில்)

இந்த | vaigarai pozhuthil vizhithein பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs, Murugan Bajanai Padalgal வைகறைப் பொழுதில் விழித்தேன் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment