Vellai Thamarai Meethamarnthu இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் வெள்ளை தாமரை மீதமர்ந்து காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

வெள்ளை தாமரை மீதமர்ந்து எழில் மாணிக்க வீணையை மீட்டுகிறாள் ‍பி. சுசீலா பாடிய‌ சரஸ்வதி தேவி பாடல்கள் தாயே கருமாரியம்மா ஆல்பத்தில் இருந்து. Vellai Thamarai Song lyrics from album Thaye Karumari Amma sung by P.Susheela – songs Tamil Lyrics

============

வெள்ளை தாமரை மீதமர்ந்து

எழில் மாணிக்க வீணையை மீட்டுகிறாள்

வெள்ளை தாமரை மீதமர்ந்து

எழில் மாணிக்க வீணையை மீட்டுகிறாள்

பொங்கும் தமிழில் தேன் கவிதை

பொங்கும் தமிழில் தேன் கவிதை

தினம் பாடிட வைத்தே கேட்டிருப்பாள்

அந்த கலைமகள் என்றும் வாழ்த்துரைப்பாள்

அகரத்தில் தொடங்கும் வார்த்தைகளை

அகிலத்தில் எங்கும் அறிய வைத்தாள்

ஓசையில் உணரும் பாஷைகளை

பூமியில் என்றும் பேச வைத்தாள்

ஓம் ஓம் ஓம் ஓம்

அகரத்தில் தொடங்கும் வார்த்தைகளை

அகிலத்தில் எங்கும் அறிய வைத்தாள்

ஓசையில் உணரும் பாஷைகளை

பூமியில் என்றும் பேச வைத்தாள்

மூட‌ நிலை கொண்ட காளிதாசரை

பாடிட வைத்த கலை அரசி

அருணகிரி நாதர் திருப்புகழ் பாடிட

நாவில் அமர்ந்த எழிலரசி

ஞானசம்பந்தர் மதுர கவிபாட

ஞான நிலை தந்த கல்யாணி

ஞானசம்பந்தர் மதுர கவிபாட

ஞான நிலை தந்த கல்யாணி

ஏழு சுவரங்களும் தாள லயங்களும்

போற்றி புகழ்கின்ற கலைவாணி

ஏழு சுவரங்களும் தாள லயங்களும்

போற்றி புகழ்கின்ற கலைவாணி

வெள்ளை தாமரை மீதமர்ந்து

எழில் மாணிக்க வீணையை மீட்டுகிறாள்

பொங்கும் தமிழில் தேன் கவிதை

தினம் பாடிட வைத்தே கேட்டிருப்பாள்

அந்த கலைமகள் என்றும் வாழ்த்துரைப்பாள்

வெள்ளை தாமரை மீதமர்ந்து

எழில் மாணிக்க வீணையை மீட்டுகிறாள்

கருணையில் திகழும் கலைமகளே

கலியுகம் சிறந்திட வரம் தருவாள்

நான்முகன் வலப்புறம் அமர்ந்தவளே

வாழ்வினில் உயர்ந்திட நலம் தருவாள்

கருணையில் திகழும் கலைமகளே

கலியுகம் சிறந்திட வரம் தருவாள்

நான்முகன் வலப்புறம் அமர்ந்தவளே

வாழ்வினில் உயர்ந்திட நலம் தருவாள்

வீணை ஒலி சிந்த கான மழையினை

பொழிந்திடும் எங்கள் பூமகளே

கல்வி கடலென்று உன்புகழ் பாடிட

சிந்தையில் உறையும் நாமகளே

கால வரலாறு போற்றி புகழ்பாட

தாள லயம் தந்த அருள்வேணி

கால வரலாறு போற்றி புகழ்பாட

தாள லயம் தந்த அருள்வேணி

நாங்கு கரங்களில் வேண்டும் வரங்களை

வாரி வழங்கிடும் அருள்வாணி

நாங்கு கரங்களில் வேண்டும் வரங்களை

வாரி வழங்கிடும் அருள்வாணி

வெள்ளை தாமரை மீதமர்ந்து

எழில் மாணிக்க வீணையை மீட்டுகிறாய்

பொங்கும் தமிழில் தேன் கவிதை

தினம் பாடிட வைத்தே கேட்டிருப்பாள்

அந்த கலைமகள் என்றும் வாழ்த்துரைப்பாள்

வெள்ளை தாமரை மீதமர்ந்து

எழில் மாணிக்க வீணையை மீட்டுகிறாய்

இந்த | vellai thamarai meethamarnthu பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Saraswathi Devi Songs, சரஸ்வதி தேவி பாடல்கள், Krithis, Navarathri Special Tamil Songs Lyrics வெள்ளை தாமரை மீதமர்ந்து போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment