தலையெ லாம்பறிக் பாடல் வரிகள் (talaiye lamparik) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் பழையாறை வடதளி – முழையூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : பழையாறை வடதளி – முழையூர்
சுவாமி : சோமேஸ்வரர்
அம்பாள் : சோமகலாநாயகி

தலையெ லாம்பறிக்

தலையெ லாம்பறிக்
குஞ்சமண் கையருள்
நிலையி னான்மறைத்
தான்மறைக் கொண்ணுமே
அலையி னார்பொழி
லாறை வடதளி
நிலையி னானடி
யேநினைந் துய்ம்மினே. 1

மூக்கி னால்முரன்
றோதியக் குண்டிகை
தூக்கி னார்குலந்
தூரறுத் தேதனக்
காக்கி னானணி
யாறை வடதளி
நோக்கி னார்க்கில்லை
யாலரு நோய்களே. 2

குண்ட ரைக்குண
மில்லரைக் கூறையில்
மிண்ட ரைத்துரந்
தவிம லன்றனை
அண்ட ரைப்பழை
யாறை வடதளிக்
கண்ட ரைத்தொழு
துய்ந்தன கைகளே. 3

முடைய ரைத்தலை
முண்டிக்கும் மொட்டரை
கடைய ரைக்கடிந்
தார்கனல் வெண்மழுப்
படைய ரைப்பழை
யாறை வடதளி
உடைய ரைக்குளிர்ந்
துள்குமென் உள்ளமே. 4

ஒள்ள ரிக்கணார்
முன்னமண் நின்றுணுங்
கள்ள ரைக்கடிந்
தகருப் பூறலை
அள்ள லம்புன
லாறை வடதளி
வள்ள லைப்புக
ழத்துயர் வாடுமே. 5

நீதி யைக்கெட
நின்றம ணேயுணுஞ்
சாதி யைக்கெடு
மாசெய்த சங்கரன்
ஆதி யைப்பழை
யாறை வடதளிச்
சோதி யைத்தொழு
வார்துயர் தீருமே. 6

திரட்டி ரைக்க
வளந்திணிக் குஞ்சமண்
பிரட்ட ரைப்பிரித்
தபெரு மான்றனை
அருட்டி றத்தணி
யாறை வடதளித்
தெருட்ட ரைத்தொழத்
தீவினை தீருமே. 7

ஓதி னத்தெழுத்
தஞ்சுண ராச்சமண்
வேதி னைப்படுத்
தானைவெங் கூற்றுதை
பாத னைப்பழை
யாறை வடதளி
நாத னைத்தொழ
நம்வினை நாசமே. 8

வாயி ருந்தமி
ழேபடித் தாளுறா
ஆயி ரஞ்சம
ணும்மழி வாக்கினான்
பாயி ரும்புன
லாறை வடதளி
மேய வன்னென
வல்வினை வீடுமே. 9

செருத்த னைச்செயுஞ்
சேணரக் கன்னுடல்
எருத்தி றவிர
லாலிறை யூன்றிய
அருத்த னைப்பழை
யாறை வடதளித்
திருத்த னைத்தொழு
வார்வினை தேயுமே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment