முடிப்பது கங்கையுந் பாடல் வரிகள் (mutippatu kankaiyun) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் முடிப்பதுகங்கை தலம் பொதுப் பதிகங்கள் நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : பொதுப் பதிகங்கள்
தலம் : முடிப்பதுகங்கைமுடிப்பது கங்கையுந்

முடிப்பது கங்கையுந் திங்களுஞ்
செற்றது மூவெயில்
நொடிப்பது மாத்திரை நீறெ
ழக்கணை நூறினார்
கடிப்பது மேறுமென் றஞ்சு
வன்றிருக் கைகளாற்
பிடிப்பது பாம்பன்றி இல்லை
யோவெம் பிரானுக்கே. 1

தூறன்றி ஆடரங் கில்லை
யோசுட லைப்பொடி
நீறன்றிச் சாந்தமற் றில்லை
யோஇம வான்மகள்
கூறன்றிக் கூறாவ தில்லை
யோகொல்லைச் சில்லைவெள்
ளேறன்றி ஏறுவ தில்லை
யோவெம் பிரானுக்கே. 2

தட்டெனுந் தட்டெனுந் தொண்டர்
காள்தடு மாற்றத்தை
ஒட்டெனும் ஒட்டெனும் மாநி
லத்துயிர் கோறலைச்
சிட்டன் திரிபுரஞ் சுட்ட
தேவர்கள் தேவனை
வெட்டெனப் பேசன்மின் தொண்டர்
காளெம் பிரானையே. 3

நரிதலை கவ்வநின் றோரி
கூப்பிட நள்ளிருள்
எரிதலைப் பேய்புடை சூழ
ஆரிருள் காட்டிடைச்
சிரிதலை மாலை சடைக்க
ணிந்தவெஞ் செல்வனைப்
பிரிதலைப் பேசன்மின் தொண்டர்
காளெம் பிரானையே. 4

வேயன தோளி மலைம
களைவி ரும்பிய
மாயமில் மாமலை நாட
னாகிய மாண்பனை
ஆயன சொல்லிநின் றார்கள்
அல்லல் அறுக்கிலும்
பேயனே பித்தனே என்ப
ராலெம் பிரானையே. 5

இறைவனென் றெம்பெரு மானை
வானவ ரேத்தப்போய்த்
துறையொன்றித் தூமல ரிட்ட
டியிணை போற்றுவார்
மறையன்றிப் பாடுவ தில்லை
யோமல்கு வானிளம்
பிறையன்றிச் சூடுவ தில்லை
யோவெம் பிரானுக்கே. 6

தாருந்தண் கொன்றையுங் கூவி
ளந்தனி மத்தமும்
ஆரும் அளவறி யாத
ஆதியும் அந்தமும்
ஊருமொன் றில்லை உலகெ
லாமுகப் பார்தொழப்
பேருமோ ராயிரம் என்ப
ராலெம் பிரானுக்கே. 7

அரியொடு பூமிசை யானும்
ஆதியும் அறிகிலார்
வரிதரு பாம்பொடு வன்னி
திங்களும் மத்தமும்
புரிதரு புன்சடை வைத்த
எம்புனி தற்கினி
எரியன்றி அங்கைக்கொன் றில்லை
யோவெம் பிரானுக்கே. 8

கரிய மனச்சமண் காடி
யாடு கழுக்களால்
எரிய வசவுணுந் தன்மை
யோஇம வான்மகள்
பெரிய மனந்தடு மாற
வேண்டிப்பெம் மான்மதக்
கரியின் உரியல்ல தில்லை
யோவெம் பிரானுக்கே. 9

காய்சின மால்விடை மாணிக்
கத்தெங் கறைக்கண்டத்
தீசனை ஊரனெட் டோ
டிரண்டுவி ரும்பிய
ஆயின சீர்ப்பகை ஞானியப்
பன்னடித் தொண்டன்றான்
ஏசின பேசுமின் தொண்டர்
காளெம் பிரானையே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment