முற்றி லாமுலை பாடல் வரிகள் (murri lamulai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் கடம்பந்துறை – குளித்தலை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : கடம்பந்துறை – குளித்தலை
சுவாமி : கடம்பவனேஸ்வரர்
அம்பாள் : முற்றிலாமுலையாள்

முற்றி லாமுலை

முற்றி லாமுலை
யாளிவ ளாகிலும்
அற்றந் தீர்க்கும்
அறிவில ளாகிலுங்
கற்றைச் செஞ்சடை
யான்கடம் பந்துறைப்
பெற்ற மூர்தியென்
றாளெங்கள் பேதையே. 1

தனகி ருந்ததொர்
தன்மைய ராகிலும்
முனகு தீரத்
தொழுதெழு மின்களோ
கனகப் புன்சடை
யான்கடம் பந்துறை
நினைய வல்லவர்
நீள்விசும் பாள்வரே. 2

ஆரி யந்தமி
ழோடிசை யானவன்
கூரி யகுணத்
தார்குறி நின்றவன்
காரி கையுடை
யான்கடம் பந்துறைச்
சீரி யல்பத்தர்
சென்றடை மின்களே. 3

பண்ணின் இன்மொழி
கேட்கும் பரமனை
வண்ண நன்மல
ரான்பல தேவருங்
கண்ண னும்மறி
யான்கடம் பந்துறை
நண்ண நம்வினை
யாயின நாசமே. 4

மறைகொண் டம்மனத்
தானை மனத்துளே
நிறைகொண் டந்நெஞ்சி
னுள்ளுற வைம்மினோ
கறைகண் டன்னுறை
யுங்கடம் பந்துறை
சிறைகொண் டவினை
தீரத் தொழுமினே. 5

நங்கை பாகம்வைத்
தந்நறுஞ் சோதியைப்
பங்க மின்றிப்
பணிந்தெழு மின்களோ
கங்கைச் செஞ்சடை
யான்கடம் பந்துறை
அங்க மோதி
அரனுறை கின்றதே. 6

அரிய நான்மறை
ஆறங்க மாயைந்து
புரியன் தேவர்க
ளேத்தநஞ் சுண்டவன்
கரிய கண்டத்தி
னான்கடம் பந்துறை
உரிய வாறு
நினைமட நெஞ்சமே. 7

பூமென் கோதை
உமையொரு பாகனை
ஓமஞ் செய்தும்
உணர்மின்கள் உள்ளத்தாற்
காமற் காய்ந்த
பிரான்கடம் பந்துறை
நாம மேத்தநந்
தீவினை நாசமே. 8

பார ணங்கி
வணங்கிப் பணிசெய
நார ணன்பிர
மன்னறி யாததோர்
கார ணன்கடம்
பந்துறை மேவிய
ஆர ணங்கொரு
பாலுடை மைந்தனே. 9

நூலால் நன்றா
நினைமின்கள் நோய்கெடப்
பாலான் ஐந்துடன்
ஆடும் பரமனார்
காலால் ஊன்றுகந்
தான்கடம் பந்துறை
மேலால் நாஞ்செய்த
வல்வினை வீடுமே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment