மாட்டுப் பள்ளி பாடல் வரிகள் (mattup palli) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்காட்டுப்பள்ளி – மேலைதிருக்காட்டுப்பள்ளி தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருக்காட்டுப்பள்ளி – மேலைதிருக்காட்டுப்பள்ளி
சுவாமி : ஆரணியசுந்தரர்
அம்பாள் : அகிலாண்டநாயகி

மாட்டுப் பள்ளி

மாட்டுப் பள்ளி
மகிழ்ந்துறை வீர்க்கெலாங்
கேட்டுப் பள்ளிகண்
டீர்கெடு வீரிது
ஓட்டுப் பள்ளிவிட்
டோட லுறாமுனங்
காட்டுப் பள்ளியு
ளான்கழல் சேர்மினே. 1

மாட்டைத் தேடி
மகிழ்ந்துநீர் நும்முளே
நாட்டுப் பொய்யெலாம்
பேசிடு நாணிலீர்
கூட்டை விட்டுயிர்
போவதன் முன்னமே
காட்டுப் பள்ளியு
ளான்கழல் சேர்மினே. 2

தேனை வென்றசொல்
லாளொடு செல்வமும்
ஊனை விட்டுயிர்
போவதன் முன்னமே
கான வேடர்
கருதுங்காட் டுப்பள்ளி
ஞான நாயக
னைச்சென்று நண்ணுமே. 3

அருத்த மும்மனை
யாளொடு மக்களும்
பொருத்த மில்லை
பொல்லாதது போக்கிடுங்
கருத்தன் கண்ணுதல்
அண்ணல்காட் டுப்பள்ளித்
திருத்தன் சேவடி
யைச்சென்று சேர்மினே. 4

சுற்ற முந்துணை
யும்மனை வாழ்க்கையும்
அற்ற போதணை
யாரவ ரென்றென்றே
கற்ற வர்கள்
கருதுங்காட் டுப்பள்ளிப்
பெற்ற மேறும்
பிரானடி சேர்மினே. 5

அடும்புங் கொன்றையும்
வன்னியும் மத்தமுந்
துடும்பல் செய்சடைத்
தூமணிச் சோதியான்
கடம்பன் தாதை
கருதுங்காட் டுப்பள்ளி
உடம்பி னார்க்கோர்
உறுதுணை யாகுமே. 6

மெய்யின் மாசுடை
யாருடல் மூடுவார்
பொய்யை மெய்யென்று
புக்குடன் வீழன்மின்
கையின் மானுடை
யான்காட்டுப் பள்ளியெம்
ஐயன் றன்னடி
யேயடைந் துய்ம்மினே. 7

வேலை வென்றகண்
ணாரை விரும்பிநீர்
சீலங் கெட்டுத்
திகையன்மின் பேதைகாள்
காலை யேதொழுங்
காட்டுப்பள் ளியுறை
நீல கண்டனை
நித்தல் நினைமினே. 8

இன்று ளார்நாளை
இல்லை யெனும்பொருள்
ஒன்று மோரா
துழிதரும் ஊமர்காள்
அன்று வானவர்க்
காக விடமுண்ட
கண்ட னார்காட்டுப்
பள்ளிகண் டுய்ம்மினே. 9

எண்ணி லாவரக்
கன்மலை யேந்திட
எண்ணி நீண்முடி
பத்து மிறுத்தவன்
கண்ணு ளார்கரு
துங்காட்டுப் பள்ளியை
நண்ணு வாரவர்
தம்வினை நாசமே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment