மைக்கொள் கண்ணுமை பாடல் வரிகள் (maikkol kannumai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கோளிலி – திருக்குவளை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருக்கோளிலி – திருக்குவளை
சுவாமி : பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : வண்டமர்பூங்குழலி

மைக்கொள் கண்ணுமை

மைக்கொள் கண்ணுமை
பங்கினன் மான்மழுத்
தொக்க கையினன்
செய்யதோர் சோதியன்
கொக்க மர்பொழில்
சூழ்தரு கோளிலி
நக்க னைத்தொழ
நம்வினை நாசமே. 1

முத்தி னைமுத
லாகிய மூர்த்தியை
வித்தி னைவிளை
வாய விகிர்தனைக்
கொத்த லர்பொழில்
சூழ்தரு கோளிலி
அத்த னைத்தொழ
நீங்கும்நம் மல்லலே. 2

வெண்டி ரைப்பர
வைவிட முண்டதோர்
கண்ட னைக்கலந்
தார்தமக் கன்பனைக்
கொண்ட லம்பொழிற்
கோளிலி மேவிய
அண்ட னைத்தொழு
வார்க்கல்ல லில்லையே. 3

பலவும் வல்வினை
பாறும் பரிசினால்
உலவுங் கங்கையுந்
திங்களும் ஒண்சடை
குலவி னான்குளி
ரும்பொழிற் கோளிலி
நிலவி னான்றனை
நித்தல் நினைமினே. 4

அல்ல லாயின
தீரும் அழகிய
முல்லை வெண்முறு
வல்லுமை யஞ்சவே
கொல்லை யானை
யுரித்தவன் கோளிலிச்
செல்வன் சேவடி
சென்று தொழுமினே. 5

ஆவின் பால்கண்
டளவில் அருந்தவப்
பாலன் வேண்டலுஞ்
செல்லென்று பாற்கடல்
கூவி னான்குளி
ரும்பொழிற் கோளிலி
மேவி னானைத்
தொழவினை வீடுமே. 6

சீர்த்த நன்மனை
யாளுஞ் சிறுவரும்
ஆர்த்த சுற்றமும்
பற்றிலை யாதலாற்
கூத்த னாருறை
யுந்திருக் கோளிலி
ஏத்தி நீர்தொழு
மின்னிடர் தீருமே. 7

மால தாகி
மயங்கும் மனிதர்காள்
காலம் வந்து
கடைமுடி யாமுனங்
கோல வார்பொழிற்
கோளிலி மேவிய
நீல கண்டனை
நின்று நினைமினே. 8

கேடு மூடிக்
கிடந்துண்ணு நாடது
தேடி நீர்திரி
யாதே சிவகதி
கூட லாந்திருக்
கோளிலி ஈசனைப்
பாடு மின்னிர
வோடு பகலுமே. 9

மடுத்து மாமலை
யேந்தலுற் றான்றனை
அடர்த்துப் பின்னும்
இரங்கி யவற்கருள்
கொடுத்த வன்னுறை
கோளிலி யேதொழ
விடுத்து நீங்கிடும்
மேலை வினைகளே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment