மாசிலொள் வாள்போல் பாடல் வரிகள் (macilol valpol) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவதிகைவீரட்டானம் தலம் நடுநாடு நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : நடுநாடு
தலம் : திருவதிகைவீரட்டானம்
சுவாமி : வீரட்டானேஸ்வரர்
அம்பாள் : திரிபுரசுந்தரி

மாசிலொள் வாள்போல்

மாசிலொள் வாள்போல் மறியும்
மணிநீர்த் திரைத்தொகுதி
ஊசலை யாடியங் கொண்சிறை
அன்னம் உறங்கலுற்றால்
பாசறை நீலம் பருகிய
வண்டுபண் பாடல்கண்டு
வீசுங் கெடில வடகரைத்
தேயெந்தை வீரட்டமே. 1

பைங்காற் றவளை பறைகொட்டப்
பாசிலை நீர்ப்படுகர்
அங்காற் குவளைமேல் ஆவி
உயிர்ப்ப அருகுலவுஞ்
செங்காற் குருகிவை சேருஞ்
செறிகெடி லக்கரைத்தே
வெங்காற் குருசிலை வீரன்
அருள்வைத்த வீரட்டமே. 2

அம்மலர்க் கண்ணியர் அஞ்சனஞ்
செந்துவர் வாயிளையார்
வெம்முலைச் சாந்தம் விலைபெறு
மாலை யெடுத்தவர்கள்
தம்மருங் கிற்கிரங் கார்தடந்
தோள்மெலி யக்குடைவார்
விம்மு புனற்கெடி லக்கரைத்
தேயெந்தை வீரட்டமே. 3

மீனுடைத் தண்புனல் வீரட்ட
ரேநும்மை வேண்டுகின்ற
தியானுடைச் சில்குறை ஒன்றுள
தால்நறுந் தண்ணெருக்கின்
தேனுடைக் கொன்றைச் சடையுடைக்
கங்கைத் திரைதவழுங்
கூனுடைத் திங்கட் குழவியெப்
போதுங் குறிக்கொண்மினே. 4

ஆரட்ட தேனும் இரந்துண்
டகமக வன்றிரிந்து
வேரட்ட நிற்பித் திடுகின்ற
தால்விரி நீர்ப்பரவைச்
சூரட்ட வேலவன் தாதையைச்
சூழ்வய லாரதிகை
வீரட்டத் தானை விரும்பா
வரும்பாவ வேதனையே. 5

படர்பொற் சடையும் பகுவாய்
அரவும் பனிமதியுஞ்
சுடலைப் பொடியு மெல்லா
முளவேயவர் தூயதெண்ணீர்க்
கெடிலக் கரைத்திரு வீரட்ட
ராவர்கெட் டேனடைந்தார்
நடலைக்கு நற்றுணை யாகுங்கண்
டீரவர் நாமங்களே. 6

காளங் கடந்ததொர் கண்டத்த
ராகிக் கண்ணார்கெடில
நாளங் கடிக்கொர் நகரமு
மாதிற்கு நன்கிசைந்த
தாளங்கள் கொண்டுங் குழல்கொண்டு
மியாழ்கொண்டுந் தாமங்ஙனே
வேடங்கள் கொண்டும் விசும்புசெல்
வாரவர் வீரட்டரே. 7

இப்பதிகத்தில் 8-ம் செய்யுட்கள் மறைந்து போயின. 8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுட்கள் மறைந்து போயின. 9

இப்பதிகத்தில் 10-ம் செய்யுட்கள் மறைந்து போயின.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment