கொடிகொள் செல்வ பாடல் வரிகள் (kotikol celva) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்பூந்துருத்தி தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருப்பூந்துருத்தி
சுவாமி : புஷ்பவனநாதர்
அம்பாள் : அழகாலமர்ந்தநாயகி

கொடிகொள் செல்வ

கொடிகொள் செல்வ
விழாக்குண லையறாக்
கடிகொள் பூம்பொழிற்
கச்சியே கம்பனார்
பொடிகள் பூசிய
பூந்துருத் திந்நகர்
அடிகள் சேவடிக்
கீழ்நா மிருப்பதே. 1

ஆர்த்த தோலுடை
கட்டியோர் வேடனாய்ப்
பார்த்த னோடு
படைதொடு மாகிலும்
பூத்த நீள்பொழிற்
பூந்துருத் திந்நகர்த்
தீர்த்தன் சேவடிக்
கீழ்நா மிருப்பதே. 2

மாதி னைமதித்
தானொரு பாகமாக்
காத லாற்கரந்
தான்சடைக் கங்கையைப்
பூத நாயகன்
பூந்துருத் திந்நகர்க்
காதி சேவடிக்
கீழ்நா மிருப்பதே. 3

மூவ னாய்முத
லாயிவ் வுலகெலாங்
காவ னாய்க்கடுங்
காலனைக் காய்ந்தவன்
பூவின் நாயகன்
பூந்துருத் திந்கர்த்
தேவன் சேவடிக்
கீழ்நா மிருப்பதே. 4

செம்பொ னேயொக்கும்
மேனியன் தேசத்தில்
உம்ப ராரவ
ரோடங் கிருக்கிலும்
பொன்பொ னார்செல்வப்
பூந்துருத் திந்நகர்
நம்பன் சேவடிக்
கீழ்நா மிருப்பதே. 5

வல்லம் பேசி
வலிசெய்மூன் றூரினைக்
கொல்லம் பேசிக்
கொடுஞ்சரம் நூறினான்
புல்லம் பேசியும்
பூந்துருத் திந்நகர்ச்
செல்வன் சேவடிக்
கீழ்நா மிருப்பதே. 6

ஒருத்த னாயுல
கேழுந் தொழநின்று
பருத்த பாம்பொடு
பான்மதி கங்கையும்
பொருத்த னாகிலும்
பூந்துருத் திந்நகர்த்
திருத்தன் சேவடிக்
கீழ்நா மிருப்பதே. 7

அதிரர் தேவர்
இயக்கர் விச்சாதரர்
கருத நின்றவர்
காண்பரி தாயினான்
பொருத நீர்வரு
பூந்துருத் திந்நகர்ச்
சதுரன் சேவடிக்
கீழ்நா மிருப்பதே. 8

செதுக றாமனத்
தார்புறங் கூறினுங்
கொதுக றாக்கண்ணி
னோன்பிகள் கூறினும்
பொதுவின் நாயகன்
பூந்துருத் திந்நகர்க்
கதிபன் சேவடிக்
கீழ்நா மிருப்பதே. 9

துடித்த தோல்வலி
வாளரக் கன்றனைப்
பிடித்த கைஞ்ஞெரிந்
துற்றன கண்ணெலாம்
பொடிக்க வூன்றிய
பூந்துருத் திந்நகர்ப்
படிகொள் சேவடிக்
கீழ்நா மிருப்பதே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment