எட்டு நாண்மலர் பாடல் வரிகள் (ettu nanmalar) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவதிகைவீரட்டானம் தலம் நடுநாடு நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : நடுநாடு
தலம் : திருவதிகைவீரட்டானம்
சுவாமி : வீரட்டானேஸ்வரர்
அம்பாள் : திரிபுரசுந்தரி

எட்டு நாண்மலர்

எட்டு நாண்மலர்
கொண்டவன் சேவடி
மட்ட லரிடு
வார்வினை மாயுமால்
கட்டித் தேன்கலந்
தன்ன கெடிலவீ
ரட்ட னாரடி
சேரு மவருக்கே. 1

நீள மாநினைந்
தெண்மலர் இட்டவர்
கோள வல்வினை
யுங்குறை விப்பரால்
வாள மாலிழி
யுங்கெடி லக்கரை
வேளி சூழ்ந்தழ
காய வீரட்டரே. 2

கள்ளின் நாண்மல
ரோரிரு நான்குகொண்
டுள்குவா ரவர்
வல்வினை யோட்டுவார்
தெள்ளு நீர்வயல்
பாய்கெடி லக்கரை
வெள்ளை நீறணி
மேனிவீ ரட்டரே. 3

பூங்கொத் தாயின
மூன்றொடோ ரைந்திட்டு
வாங்கி நின்றவர்
வல்வினை யோட்டுவார்
வீங்கு தண்புனல்
பாய்கெடி லக்கரை
வேங்கைத் தோலுடை
யாடைவீ ரட்டரே. 4

தேனப் போதுகள்
மூன்றொடோ ரைந்துடன்
தானப் போதிடு
வார்வினை தீர்ப்பவர்
மீனத் தண்புனல்
பாய்கெடி லக்கரை
வேன லானை
யுரித்தவீ ரட்டரே. 5

ஏழித் தொன்மலர்
கொண்டு பணிந்தவர்
ஊழித் தொல்வினை
யோட அகற்றுவார்
பாழித் தண்புனல்
பாய்கெடி லக்கரை
வேழத் தின்னுரி
போர்த்தவீ ரட்டரே. 6

உரைசெய் நூல்வழி
யொண்மல ரெட்டிடத்
திரைகள் போல்வரு
வல்வினை தீர்ப்பரால்
வரைகள் வந்திழி
யுங்கெடி லக்கரை
விரைகள் சூழ்ந்தழ
காயவீ ரட்டரே. 7

ஓலி வண்டறை
யொண்மல ரெட்டினாற்
காலை யேத்த
வினையைக் கழிப்பரால்
ஆலி வந்திழி
யுங்கெடி லக்கரை
வேலி சூழ்ந்தழ
காயவீ ரட்டரே. 8

தாரித் துள்ளித்
தடமல ரெட்டினாற்
பாரித் தேத்தவல்
லார்வினை பாற்றுவார்
மூரித் தெண்டிரை
பாய்கெடி லக்கரை
வேரிச் செஞ்சடை
வேய்ந்தவீ ரட்டரே. 9

அட்ட புட்பம்
அவைகொளு மாறுகொண்
டட்ட மூர்த்தி
அனாதிதன் பாலணைந்
தட்டு மாறுசெய்
கிற்ப அதிகைவீ
ரட்ட னாரடி
சேரு மவர்களே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment