Thiruppaarkadalil Palli Kondaye Sriman Narayana இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

============

Thiruppaarkadalil Palli Kondaye |Thiruppaarkadalil Palli Kondaye Song Lyrics

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே

ஸ்ரீமந் நாராயணா – அன்பு

திருமகள் துணையில் அமைதி கொண்டாயே

ஸ்ரீமந் நாராயணா …ஆ….ஆ….ஆ…..

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே

ஸ்ரீமந் நாராயணா – அன்பு

திருமகள் துணையில் அமைதி கொண்டாயே

ஸ்ரீமந் நாராயணா

உலகினைப் பாய் போல் உண்டவன் நீயே

ஸ்ரீமந் நாராயணா – அன்று

உரலுடன் நடந்த கண்ணனும் நீயே

ஸ்ரீமந் நாராயணா

இரணியன் அகந்தை அழித்தவன் நீயே

ஸ்ரீமந் நாராயணா – அன்று

இந்திர வில்லை முறித்தவன் நீயே

ஸ்ரீமந் நாராயணா ………ஆ……ஆ……ஆ…….

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே

ஸ்ரீமந் நாராயணா – அன்பு

திருமகள் துணையில் அமைதி கொண்டாயே

ஸ்ரீமந் நாராயணா

கொடியவள் மகிஷி கொலை புரிந்தாளே

அறியாயோ நீயே? – அவள்

கொடுமையை ஒழிக்க மறந்து விட்டாயோ?

ஸ்ரீமந் நாராயணா

தேவர்கள் உந்தன் குழந்தைகளன்றோ

மறந்தாயோ நீயே? – உன்

தெய்வ முனிவரைக் காப்பதற்கென்றே

வருவாயோ நீயே……ஏ…..ஏ…..ஏ……..

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே

ஸ்ரீமந் நாராயணா – அன்பு

திருமகள் துணையில் அமைதி கொண்டாயே

ஸ்ரீமந் நாராயணா

தோளிலந்த சாரங்கம் எடுத்து

வரவேண்டும் நீயே – கணை

தொடுத்திட வேண்டும் அரக்கியின் வாழ்வை

அழித்திடுவாய் நீயே

அனந்த சயனத்தில் பள்ளியெழுந்து

வாராய் திருமாலே உன்

அன்பரை யெல்லாம் துன்பத்திலிருந்து

காப்பாய் பெருமாளே ……………

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே

ஸ்ரீமந் நாராயணா – அன்பு

திருமகள் துணையில் அமைதி கொண்டாயே

ஸ்ரீமந் நாராயணா

ரதங்கள் படைகளென எழுந்து எழுந்து

இன்று வீறுடன் வாருங்கள்

நாராயணனெனும் தலைவனின் துணையால்

போர்க்களம் வாருங்கள்

வானம் இடிபடவும் பூமி பொடிபடவும்

வேல் கொண்டு வாருங்கள் – இனி

வருவது வரட்டும் முடிவினைப் பார்ப்போம்

தேவர்கள் வாருங்கள்

ஸ்ரீமந் நாராயணா ஸ்ரீபதி ஜெகந்நாதா

வருவாய் திருமாலே………

துணை தருவாய் பெருமாளே…………..!

============

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே பாடல்

============

About Thiruppaarkadalil Palli Kondaye Sriman Narayana Song

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே பாடல் (Thirupparkadalil song) 1975 ஆம் ஆண்டு வெளிவந்த‌ ஸ்வாமி ஐயப்பன் திரைப்படத்தில் இடம் பெற்றதாகும். இந்த பாடலை இயற்றியவர் கவிஞர் கண்ணதாசன். இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் திரு.தேவராஜன் மற்றும் பாடலை பாடியவர் கே.ஜே. ஜேசுதாஸ்.

இந்த திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா | thiruppaarkadalil palli kondaye sriman narayana song பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Vishnu songs, பெருமாள் பாடல்கள் திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment