Adithaalum Nee Anaithaalum Nee இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் அடித்தாலும் நீ அணைத்தாலும் நீ காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

அடித்தாலும் நீ அணைத்தாலும் நீ முத்தான‌ முருகன் பாடல் — சுந்தராம்பாள் அம்மாவின் குரல். Adithaalum Nee Anaithaalum Nee – Murugan Devotional Song lyrics by Smt. K.B. SUNDARAMBAL

அடித்தாலும் நீ

அணைத்தாலும் நீ – என்னை

அடித்தாலும் நீ

அணைத்தாலும் நீ – உன்னைக்

கூறுவார் சிறப்புக்குக்

குவலயம் நீ

அடித்தாலும் நீ – என்னை

அணைத்தாலும் நீ

கடுக்க நிற்கும் ஏழை – கால்

கடுக்க நிற்கும் ஏழை – சன்னிதியில் கால்

கடுக்க நிற்கும் ஏழை – முருகா!

உன் சன்னிதியில் கால்

கடுக்க நிற்கும் இந்த ஏழை

கடுக்க நிற்கும் ஏழை – என்

இடுக்கண் கலையாமல்

கடுக்க நிற்கும் ஏழை – என்

இடுக்கண் கலையாமல்

படுத்தாத பாடல்லாம்

படுத்துகிறாய் ஐயா!

அடித்தாலும் நீ

அணைத்தாலும் நீ…

தொடுக்கும் மலர்கள் பல தூய மனத்தோடே தொடுத்தேன் -நின்பாதம்

அடுத்தேன் தொடுக்கும் மலர்கள் பல தூய மனத்தோடே தொடுத்தேன் நின்பாதம் அடுத்தேன் – என்னைத்

தடுத்தே ஆட்கொள்ளாமல் – முருகா! –

என்னைத் தடுத்தே ஆட்கொள்ளாமல் தரணியில் – என்னைத்

தடுத்தே ஆட்கொள்ளாமல் – தரணியில் எனைத் தனியே

விடுத்தால் இனி என்செய்வேன்

வேதனை இனி தாளேன்

தடுத்தே ஆட்கொள்ளாமல் தரணியில் எனைத் தனியே விடுத்தால் என்செய்வேன் வேதனை இனி தாளேன்

அடித்தாலும் நீ

அணைத்தாலும் நீ – உன்னைக்

கூறுவார் சிறப்புக்குக்

குவலயம் நீ

அடித்தாலும் நீ – என்னை

அணைத்தாலும் நீ

இந்த | adithaalum nee anaithaalum nee பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், Murugan songs அடித்தாலும் நீ அணைத்தாலும் நீ போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment