Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் கண்டத்தில் நஞ்சினை சுமந்ததினால் திருநீலகண்டனானான் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

கண்டத்தில் நஞ்சினை சுமந்ததினால் திருநீலகண்டனானான் பாடல் வரிகள். Kandaththil Nanjinai sumanthathinaal thiru Neelakandan K.J.Yesudhas Ayyappa song Tamil Lyrics

கண்டத்தில் நஞ்சினை சுமந்ததினால் திருநீலகண்டனானான்

ஐயன் கண்டத்தில் மணியினை சுமந்ததினால்

மணிகண்ட‌ சுவாமி ஆனான்

பிண்டத்தில் பாதியை உமையிடம் தந்து அர்த்த‌ நாரியானான்

அந்த‌ ஹரனவன் ஹரியுடன் கலந்ததினாலே ஹரிஹரசுதனானான்

இருமுடி ஏற்று ஏற்று சிரத்தினில் ஏற்று

ஐயனை நெஞ்சில் போற்று போற்று கரம் குவிந்து போற்று

நாளும் கரம் குவித்து போற்று (கண்டத்தில்)

சன்னதி நோக்கி பக்தர்கள் கூட்டம் புறப்படும் திசை எட்டு

அந்த‌ பக்த்ர் கூட்டமும் கூடுவதோ உன் பதினெட்டு படிகட்டு

தவத்திரு பதினெட்டு பதினெட்டு படிக்கட்டு

ஏறுகிறேன் படி ஏறுகிறேன் ஐயன்

உனை நான் காணுகிறேன் காணுகிறேன்

எனது மனம் உனது உடல் பொருளும் உனது

ஐம்பிலனும் உனது ஐயா

அகிலம் உனது அதன் உயிரினங்கள் உனது

பிறவியும் உனது ஐயா

பசியினைப் போக்கிட‌ பசுவினை நோக்கி கன்று வருவதியல்பு

மனப்பசியுள்ள‌ மனிதன் ஐயனைக் காண‌ அருள்வதும் அவனியல்பு

அருள்வதும் ஐயம் அவனியல்பு

முடிவெடுப்போம் இருமுடியெடுப்போம்

முடிவனே என‌ உணர்ந்தெடுப்போம் உணர்ந்தெடுப்போம்

வழிகள் பல‌ நடந்து பம்பை நதி கடந்து

சபரிமலை அடையும் பக்தரே

வீண் ஆசைகளைத் துறந்து ஐயன்வசம் பணிந்து

முக்தியை நாமும் பெருவோமே(கண்டத்தில்)

‘பத்மஸ்ரீ’ கே. ஜே. ஜேசுதாஸ் பாடிய‌ ‘கண்டத்தில் நஞ்சினை சுமந்ததினால் திருநீலகண்டனானான்’ ஐயப்பன் பாடலின் வரிகள்.

இந்த கண்டத்தில் நஞ்சினை சுமந்ததினால் திருநீலகண்டனானான் | kandaththil nanjinai sumanthathinaal பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள், பாடல் வரிகள் கண்டத்தில் நஞ்சினை சுமந்ததினால் திருநீலகண்டனானான் கண்டத்தில் நஞ்சினை சுமந்ததினால் திருநீலகண்டனானான் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment