Abirami Stotram | Abirami Stotram Lyrics and Meaning in Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஸ்ரீ அபிராமி ஸ்தோத்ரம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

============

Abirami Stotram Lyrics in Tamil

நமஸ்தே லலிதே மி தேவி

ஸ்ரீமத் ஸிம்ஹாச நேஸ்வரி |

பக்தானாம் இஷ்ட தேஹிமி மாத:

ஸ்ரீ அபிராமி நமோஸ்துதே ||

சந்த்ரோதயம் கிருதவதி

தாடங்கேன, மஹேஸ்வரி |

ஆயுர்தேஹி ஜகன்மாத:

ஸ்ரீ அபிராமி நமோஸ்துதே ||

ஸுதா கடேச ஸ்ரீ காந்தே

சரணாகத வத்ஸலே |

ஆரோக்யம் தேஹிமே நித்யம

ஸ்ரீ அபிராமி நமோஸ்துதே ||

கல்யாணம் மி மங்களம் தேஹி

ஜகத் மங்கள காரிணி |

ஐஸ்வர்யம் தேஹிமே நித்யம்

ஸ்ரீ அபிராமி நமோஸ்து தே ||

சந்த்ர மண்டல மத்யஸ்தே

மகாத்ரிபுர சுந்தரி |

ஸ்ரீ சக்ரராஜ நிலயே ஹி

ஸ்ரீ அபிராமி நமோஸ்து தே ||

ராஜீவ லோசனே, பூர்ணே

பூர்ண சந்த்ர விதாயினி |

சௌபாக்யம் தேஹி நித்யம்

ஸ்ரீ அபிராமி நமோஸ்துதே ||

கணேச ச ஸ்கந்த ஜநநி

வேதரூபே, தனேஸ்வரி

வித்யாம் ச தேஹிமே நித்யம்

ஸ்ரீ அபிராமி மி நமோஸ்து தே |

ஸுவாஸிநிப்ரியே மாதா:

ஸௌமாங்கல்ய விவர்த்தினி

மாங்கல்யம் தேஹிமே நித்யம்

ஸ்ரீஅபிராமிமி நமோஸ்துதே|

மார்க்கண்டேய மஹாபக்த

ஸுப்ரமண்ய ஸுபூஜிதே |

ஸ்ரீராஜராஜேஸ்வரி த்வம் ஹி

ஸ்ரீஅபிராமி நமோஸ்து தே ||

ஸாந்நித்யம் குரு கல்யாணி

மமபூஜா க்ருஹே சுபே |

பிம்பே தீபே ததா புஷ்பே

ஹரித்ராகுங்குமே மம ||

ஸ்ரீஅபிராம்யா இதம் ஸ்தோத்ரம்

ய: படேத் சக்தி சந்நிதௌ |

ஆயுர் பலம் யசோ வர்ச்சோ

மங்களம் ச பவேத்ஸுகம் ||

ஸ்ரீஅபிராமி ஸ்தோத்ரம் நிறைவு

============

அபிராமி ஸ்தோத்ரம் பொருள்

============

Abirami Stotram Meaning in Tamil | Abirami Stotram Lyrics and Meaning in Tamil

நமஸ்தே லலிதே மி தேவி

ஸ்ரீமத் ஸிம்ஹாச நேஸ்வரி |

பக்தானாம் இஷ்ட தேஹிமி மாத:

ஸ்ரீ அபிராமி நமோஸ்துதே ||

ஸ்ரீ லலிதையே, உனக்கு நமஸ்காரம். தேவி, எழில்மிகு சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவளே! அடியார்கள் கோருவதைத் தருபவளே! ஸ்ரீ அபிராமியே உனக்கு நமஸ்காரம்.

சந்த்ரோதயம் கிருதவதி

தாடங்கேன, மஹேஸ்வரி |

ஆயுர்தேஹி ஜகன்மாத:

ஸ்ரீ அபிராமி நமோஸ்துதே ||

மகேஸ்வரி, ஒரு தாடங்கத்தின் மூலம் முழு நிலவை உண்டாக்கக் கூடியவள் நீ. பக்தர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும் ஸ்ரீ அபிராமியே உனக்கு நமஸ்காரம்.

ஸுதா கடேச ஸ்ரீ காந்தே

சரணாகத வத்ஸலே |

ஆரோக்யம் தேஹிமே நித்யம

ஸ்ரீ அபிராமி நமோஸ்துதே ||

அமிர்தகடேஸ்வரனை காந்தனாக அடைந்து சரணடைந்தவர்களைக் காப்பாற்றும் வாத்சல்ய சுபாவம் உள்ளவளே… அம்மா, அபிராமியே உனக்கு நமஸ்காரம். எனக்கு நாளும் நல்ல ஆரோக்கியத்தை அருளுவாய்!

கல்யாணம் மி மங்களம் தேஹி

ஜகத் மங்கள காரிணி |

ஐஸ்வர்யம் தேஹிமே நித்யம்

ஸ்ரீ அபிராமி நமோஸ்து தே ||

கல்யாணி, மங்களத்தைக் கொடுப்பவளே! சர்வலோகங்களையும் மங்களகரமாக்குபவளே! நிலையான ஐஸ்வர்யம் கிடைக்கும்படி செய்வாயாக. அபிராமித்தாயே உனக்கு நமஸ்காரம்.

சந்த்ர மண்டல மத்யஸ்தே

மகாத்ரிபுர சுந்தரி |

ஸ்ரீ சக்ரராஜ நிலயே ஹி

ஸ்ரீ அபிராமி நமோஸ்து தே ||

சந்திர மண்டலத்தின் நடுவே அமர்ந்த மகாதிரிபுரசுந்தரி நீயே அல்லவா!

ஸ்ரீ சக்ரராஜதானியின் அரசியான அபிராமியே உனக்கு நமஸ்காரம்.

ராஜீவ லோசனே, பூர்ணே

பூர்ண சந்த்ர விதாயினி |

சௌபாக்யம் தேஹி நித்யம்

ஸ்ரீ அபிராமி நமோஸ்துதே ||

தாமரை போன்ற கண்ணழகியே! முழுமையானவளே, முதன்மையானவளே, முழு நிலவைக் காட்டுபவளே, எனக்கு எப்பொழுதும் சௌபாக்கியத்தை அருளுவாயாக! ஸ்ரீ அபிராமியே, உனக்கு நமஸ்காரம்.

கணேச ச ஸ்கந்த ஜநநி

வேதரூபே, தனேஸ்வரி

வித்யாம் ச தேஹிமே நித்யம்

ஸ்ரீ அபிராமி மி நமோஸ்து தே |

ஆனைமுகனுக்கும் ஆறுமுகனுக்கும் அன்னையே, வேதசொரூபியே! செல்வத்துக்கு ஈஸ்வரியே… எனக்கு வித்யையில் கீர்த்தியைத் தருபவளே! ஸ்ரீ அபிராமியே! உனக்கு நமஸ்காரம்.

ஸுவாஸிநிப்ரியே மாதா:

ஸௌமாங்கல்ய விவர்த்தினி

மாங்கல்யம் தேஹிமே நித்யம்

ஸ்ரீஅபிராமிமி நமோஸ்துதே|

சுவாசினிகளால் போற்றப்படுபவளே. சௌமாங்கல்யப் பதவியை அதிகரிப்பவளே (பெண்கள் கணவருடன் வாழும் காலத்தை அதிகரிக்கச் செய்பவளே.) எனக்கு நித்யசௌ மாங்கல்யத்தை அருள்வாய் தாயே…! ஸ்ரீ அபிராமியே! உனக்கு நமஸ்காரம்!

மார்க்கண்டேய மஹாபக்த

ஸுப்ரமண்ய ஸுபூஜிதே |

ஸ்ரீராஜராஜேஸ்வரி த்வம் ஹி

ஸ்ரீஅபிராமி நமோஸ்து தே ||

மார்க்கண்டேயராலும் மகாபக்தரான சுப்ரமண்யராலும் (அபிராமி பட்டர்) நன்கு பூஜை செய்து வழிபடப்பட்டவளே! ஸ்ரீ ராஜராஜேஸ்வரி நீயே அல்லவா… ஸ்ரீ அபிராமியே உனக்கு நமஸ்காரம்!

ஸாந்நித்யம் குரு கல்யாணி

மமபூஜா க்ருஹே சுபே |

பிம்பே தீபே ததா புஷ்பே

ஹரித்ராகுங்குமே மம ||

கல்யாணியே (மங்களம் அருள்பவளே) என்னுடைய பூஜாகிரகத்தில் உள்ள திவ்யமான உனது பிம்பம், தீபம், புஷ்பம் மற்றும் மஞ்சள் குங்குமத்தை உன்னருளால் சாந்நித்தியமடையச் செய்வாயாக. (உனதருள் நிறைந்ததாக ஆக்குவாயாக)

ஸ்ரீஅபிராம்யா இதம் ஸ்தோத்ரம்

ய: படேத் சக்தி சந்நிதௌ |

ஆயுர் பலம் யசோ வர்ச்சோ

மங்களம் ச பவேத்ஸுகம் ||

ஸ்ரீஅபிராமியன்னையின் இந்தத்துதியினை அகம் ஒன்றி தினம் சொல்பவர்க்கு ஆயுள், பலம், கீர்த்தி, ஆரோக்யம், இவற்றோடு சகல சௌபாக்யமும் கிடைக்குமென்பது நிச்சயம்.

*** ஸ்ரீ அபிராமி ஸ்தோத்ரம் நிறைவு ***

============

சௌமாங்கல்யம், ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், கல்வி, எல்லாம் தரக்கூடிய மந்த்ரம்.

பக்தன் மார்க்கண்டேயனுக்காக காலனைக் காலால் உதைத்தார் சிவபெருமான். அப்போது கூட அம்பிகைக்கு உரிய பாகமான இடது பாகத்தின் காலாலேயே உதைத்தார் ஈசன்.அகிலத்து உயிர்களை அரவணைத்துக் காப்பதில் முன் நிற்பவள் அந்த அபிராமியே என்பதை உணர்த்தத்தான்.

எல்லா வளங்களையும் தந்து, அதனை அனுபவித்து மகிழ்ந்திட நீண்ட ஆயுளும் நிலையான ஆரோக்கியமும் அளித்திடும் அந்த அபிராமிவல்லியைத் துதித்து அவளருள் பெற்றிட வழிசெய்யும் உயர்வான துதிதான் அபிராமி ஸ்தோத்ரம்.

இந்த ஸ்ரீ அபிராமி ஸ்தோத்ரம் | abirami stotram tamil lyrics meaning பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Abirami Andhadhi songs, Goddess Abirami Song Lyrics, Stotram ஸ்ரீ அபிராமி ஸ்தோத்ரம் ஸ்ரீ அபிராமி ஸ்தோத்ரம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment