Alai Payuthey Kanna En Manam Miga Alai Payuthey இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே (உன்) ஆனந்த மோகன வேணுகானம் அதில் (அலைபாயுதே) பாடல் வரிகள் – ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல். Alai Payuthey Kanna En Manam Miga Alai Payuthey

Un Anandha Mohana Venuganam Athil Song Lyrics by Othukadu Venkata subbaiyer.

============

அலைபாயுதே கண்ணா, என் மனம் மிக அலைபாயுதே

(உன்) ஆனந்த மோகன வேணுகானம் அதில் (அலைபாயுதே)

நிலை பெயராது சிலை போலவே நின்று

நேரமாவதறியாமலே மிக விநோதமாக முரளீதரா

என் மனம் (அலைபாயுதே)

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே

திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே

கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே

கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே

கதித்த மனத்தில் உருத்தி பதத்தை

எனக்கு அளித்து மகிழ்த்தவா

ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு

உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா

கனை கடல் அலையினில் கதிரவன் ஒளியென

இணையிரு கழலெனக்-அளித்தவா

கதறி மனமுருகி நான் அழைக்கவோ

இதர மாதருடன் நீ களிக்கவோ

இது தகுமோ, இது முறையோ, இது தருமம் தானோ?

குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள்

போலவே மனது வேதனை மிகவொடு (அலைபாயுதே)

இந்த | alai payuthey kanna en manam பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல்கள், Othukadu Venkata subbaiyer Songs, Hare Krishna songs, கண்ணன் பாடல்கள், Carnatic Songs அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment