வீறு தானுடை பாடல் வரிகள் (viru tanutai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருநாரையூர் தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருநாரையூர்
சுவாமி : சௌந்தரேசுவரர்
வீறு தானுடை
வீறு தானுடை
வெற்பன் மடந்தையோர்
கூற னாகிலுங்
கூன்பிறை சூடிலும்
நாறு பூம்பொழில்
நாரையூர் நம்பனுக்(கு)
ஆறு சூடலும்
அம்ம அழகிதே. 1
புள்ளி கொண்ட
புலியுரி யாடையும்
வெள்ளி கொண்டவெண்
பூதிமெய் யாடலும்
நள்ளி தெண்டிரை
நாரையூ ரான்நஞ்சை
அள்ளி யுண்டலும்
அம்ம அழகிதே. 2
வேடு தங்கிய
வேடமும் வெண்டலை
ஓடு தங்கிய
வுண்பலி கொள்கையும்
நாடு தங்கிய
நாரையூ ரான்நடம்
ஆடு பைங்கழல்
அம்ம அழகிதே. 3
கொக்கின் றூவலுங்
கூவிளங் கண்ணியும்
மிக்க வெண்டலை
மாலை விரிசடை
நக்க னாகிலும்
நாரையூர் நம்பனுக்(கு)
அக்கி னாரமும்
அம்ம அழகிதே. 4
வடிகொள் வெண்மழு
மானமர் கைகளும்
பொடிகொள் செம்பவ
ளம்புரை மேனியும்
நடிகொள் நன்மயில் சேர்திரு நாரையூர்
அடிகள் தம்வடி வம்ம அழகிதே. 5
சூலம் மல்கிய
கையுஞ் சுடரொடு
பாலும் நெய்தயி
ராடிய பான்மையும்
ஞாலம் மல்கிய
நாரையூர் நம்பனுக்(கு)
ஆல நீழலும்
அம்ம அழகிதே. 6
பண்ணி னான்மறை
பாடலொ டாடலும்
எண்ணி லார்புர
மூன்றெரி செய்ததும்
நண்ணி னார்துயர்
தீர்த்தலும் நாரையூர்
அண்ண லார்செய்கை
அம்ம அழகிதே. 7
என்பு பூண்டெரு
தேறி இளம்பிறை
மின்பு ரிந்த
சடைமேல் விளங்கவே
நன்ப கற்பலி
தேரினும் நாரையூர்
அன்ப னுக்கது
அம்ம அழகிதே. 8
முரலுங் கின்னரம்
மொந்தை முழங்கவே
இரவி னின்றெரி
யாடலு நீடுவான்
நரலும் வாரிநன்
னாரையூர் நம்பனுக்(கு)
அரவும் பூணுதல்
அம்ம அழகிதே. 9
கடுக்கை யஞ்சடை
யன்கயி லைம்மலை
எடுத்த வாளரக்
கன்றலை ஈரைஞ்சும்
நடுக்கம் வந்திற
நாரையூ ரான்விரல்
அடுத்த தன்மையும்
அம்ம அழகிதே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
திருச்சிற்றம்பலம்
ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…
அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…
villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…
Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…
Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…
விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…